மேலும் செய்திகள்
சிரித்து பேசியதால் மனைவி ஓட்டுநரை தாக்கிய கணவர்
9 hour(s) ago
சாலுமரத திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
9 hour(s) ago
இன்று இனிதாக...
9 hour(s) ago
ஐந்து புலிகள் சிறைபிடிப்பு
9 hour(s) ago
பெங்களூரு: தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி நெய் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கர்நாடக அரசின் தயாரிப்பான 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கே.எம்.எப்., விநியோகஸ்தர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். நெய்யுடன், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் கலந்ததும் அம்பலமாகி உள்ளது. கர்நாடக அரசின் கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள் 'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. 'நந்தினி' தயாரிப்புகள் என்றாலே, வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம். திருப்பதியில் லட்டு தயாரிக்கவும் 'நந்தினி' நெய் பயன்படுத்தப்படுகிறது. விசாரணை இந்த நிலையில், 'நந்தினி' பெயரில் போலியான மற்றும் கலப்பட நெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கே.எம்.எப்., ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவினர் விசா ரணை நடத்தினர். அப்போது, பெங்களூரு சாம்ராஜ்பேட் நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள ஒரு கிடங்கில் போலியான, கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அப்படையினருக்கு தகவல் கிடைத்தது. சி.சி.பி., எனும் குற்றப்பிரிவு போ லீசாருடன் இணைந்து நேற்று முன் தினம் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். கிடங்கில் அட்டை பெட்டிகளில் இருந்த 'நந்தினி' பெயரில் இருந்த 8,136 லிட்டர் கலப்பட நெய், நான்கு வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கிடங்கு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த மகேந்திரா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி: கே.எம்.எப்., விநியோகஸ்தரான மகேந்திரா, கே.எம்.எப்.,பில் இருந்து அசல் நெய் வாங்கி, திருப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு போலியான நெய் தயாரிக்க ஆலையை நடத்தி வந்துள்ளனர். அங்கு அசல் நெய்யுடன் டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் கலந்து உள்ளனர். ஐந்து லிட்டர் நெய் பாக்கெட் என்றால், அதில் ஒரு லிட்டர் நெய் தான் உண்மையானது. மற்ற நான்கு லிட்டரும் கலப்படமானது. கே.எம்.எப்., விநியோகஸ்தர் என்பதால், நெய் பாக்கெட், அதை கடைகளுக்கு அனுப்பும் அட்டை பெட்டிகள் மீது என்னென்ன எழுதப்பட்டு இருக்கும் என்பது மகேந்திராவுக்கு நன்கு தெரிந்துள்ளது. நந்தினி பெயரில் நெய் பாக்கெட்டுகள், அட்டைகளை தயாரித்து உள்ளார். நான்கு பேர் கைது திருப்பூரில் கலப்பட நெய் தயாரித்து, அங்கிருந்து வேன்களில் பெங்களூரு கொண்டு வந்துள்ளனர். இங்குள்ள கடைகளில் விற்று அதிக லாபம் ஈட்டி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கலப்பட நெய் தயாரித்துள்ளனர். கலப்பட நெய் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தேங்காய் எண்ணெய், டால்டா, பாமாயில் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ஒரு கோடியே 26 லட்சத்து 95,200 ரூபாய். கலப்பட நெய் தயாரித்ததாக மகேந்திரா, அவரது மகன் தீபக், கலப்பட நெய்யை கடைகளுக்கு விற்ற முனிராஜ், வேன் டிரைவர் அபி அர்ஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கே.எம்.எப்.,பில் வேலை செய்யும், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. தீவிர விசாரணை நடத்துவோம். கலப்பட நெய்யை கடைகளுக்கு விற்பனை செய்தார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். விழிப்புணர்வு கலப்பட நெய் தயாரித்த வழக்கில் கைதான 4 பேரில் ஒருவர், கே.எம்.எப்., விநியோகஸ்தர் என்று தெரிந்துள்ளது. இவர்கள் நந்தினி கடைகளில், கலப்பட நெய் விற்றார்களா என்பது பற்றி விசாரிப்போம். நுகர்வோருக்கு தரமான பொருட்கள் வழங்கும் விஷயத்தில், கே.எம்.எப்., உறுதியாக உள்ளது. நந்தினி நமது நாட்டின் 2வது பெரிய பிராண்ட். நந்தினி பெயரை பயன்படுத்தினால், அதிக லாபம் ஈட்டலாம் என்று நினைத்து, கலப்பட பொருட்கள் தயாரிக்கின்றனர். கலப்பட பொருட்களை கண்டுபிடிப்பது பற்றி, நுகர்வோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். -சிவசாமி கே.எம்.எப்., தலைவர்
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago