மேலும் செய்திகள்
மின் கசிவால் தீ: வீடு எரிந்து நாசம்
5 minutes ago
பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தவர் கைது
6 minutes ago
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில் இன்று கிருத கம்பளம் பூஜை
7 minutes ago
தங்கவயல்: ''தங்கவயலில், தங்கச் சுரங்க நிறுவனத்தின், 500 ஏக்கர் காலி நிலத்தில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும்,'' என, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு தெரிவித்தார். கோலாரின் தொட்லிகேட் என்ற இடத்தில், ஷிருடி சாய்பாபா கோவிலில் மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பின் அவர் அளித்த பேட்டி: ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு, 500 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. கர்நாடகாவில் எங்கும், 500 ஏக்கர் நிலம் கிடைக்கவில்லை என்பதால், சென்னையில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் வி.சோமண்ணா ஆகியோரை சந்தித்து, தங்கவயலில் தங்கச்சுரங்க நிறுவனத்தின் 12,000 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதில், 500 ஏக்கர் நிலத்தில், ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கலாம் என்று தெரிவித்தேன். அதனை ஏற்று ஒப்புதல் அளித்தனர். இதற்கான பணிகளை ரயில்வே விரைவில் மேற்கொள்ள உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
5 minutes ago
6 minutes ago
7 minutes ago