உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /   தாமதமாக வரித்தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் 

  தாமதமாக வரித்தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத்தவறியவர்கள் தாமதமாக வரி கணக்கை தாக்கல் செய்யும் வழிமுறை தொடர்பாக ஒரு கண்ணோட்டம்.பலரும் எதிர்பார்த்தது போல, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை, கடந்த 2023 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு செய்வதற்கான அவகாசம் ஜூலை 31 ம் தேதி முடிந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை எழுந்தாலும், கெடு நீட்டிக்கப்படவில்லை என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படியே வரித்தாக்கலுக்கான அவகாசம் ஜூலை 31 ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தாமதமான தாக்கல்

உரிய நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத்தவறியவர்கள் இனி தாமதமான வரித்தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதை தாக்கல் செய்ய வேண்டும். தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்றாலும் இதில் உள்ள சிக்கல்களை அறிந்திருக்க வேண்டும். வருமான வரி கணக்கை உரிய காலத்திற்கு பின் தாமதமாக தாக்கல் செய்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு குறைவாக இருந்தால் ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்திய ஆவணம் அளிக்கப்பட்டால் மட்டுமே வரித்தாக்கல் ஆவணங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அபராதம் மட்டும் அல்லாமல், நிலுவையில் உள்ள வரி இருந்தால் கூடுதலாக அபராத வரி விதிக்கப்படலாம். வருமான வரி உச்சவரம்பிற்கு கீழ் உள்ளவர்கள் வரித்தாக்கல் செய்ய வேண்டும் கட்டாயமில்லை. எனினும் இவர்கள் விரும்பி வரிகணக்கை தாக்கல் செய்யலாம். இந்த பிரிவினர் தாமதமாக வரி கணக்கு தாக்கல் செய்தால் அபராதம் கிடையாது.

பழைய முறை

அதே நேரத்தில், தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், பழைய முறையில் அல்லாமல் புதிய முறையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். எனவே பழைய வரிவிதிப்பு முறையில் பொருந்தக்கூடிய விலக்குகள், பிடித்தங்களை கோர முடியாது. பழைய முறையில் வரித்தாக்கல் செய்ய நினைத்திருந்தவர்களுக்கு இது பாதகமான அம்சமாக அமையலாம். பழைய முறையில் இருக்கும் சாதகங்களை இழப்பதோடு, அபராத தொகையும் செலுத்த வேண்டும். தாமதமாக வரித்தாக்கல் செய்வதற்கான கெடு டிசம்பர் 31 ம் தேதி ஆகும். அதற்குள் வரித்தாக்கல் செய்யவில்லை எனில், அப்டேட் செய்யப்பட்ட முறையில் வரித்தாக்கல் செய்யலாம். ஆனால் அபராதம் தவிர நிலுவை வரி மீது கூடுதல் தொகை செலுத்த வேண்டும். வரிமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பொறுப்பு உள்ளவர்கள் வரித்தாக்கல் செய்யாமல் இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உள்ளாகலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்ப படலாம் என்பதோடு, சிறை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. அதே நேரத்தில் உரிய காலத்தில் வரிகணக்கு தாக்கல் செய்திருந்தால் பல்வேறு அணுகூலங்களை பெறலாம். மேலும், வரிகணக்கு தாக்கல் செய்தவர்கள் தங்களுக்கான பணம் திரும்பி வரும் ரீபண்ட் நிலையை, பான் கார்டு எண் கொண்டு வருமான வரி இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை