உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மாலத்தீவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

மாலத்தீவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

புதுடில்லி:மாலத்தீவுக்கான அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா எடுத்த முடிவுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.இரு நாடுகள் இடையே சிக்கல்கள் நிலவிவந்த போதிலும் , 2024--25 நிதியாண்டுக்கான ஏற்றுமதியை அதிகரித்து அனுமதி வழங்கி உள்ளது இந்தியா. இதுகுறித்து மூசா ஜமீர் கூறியிருப்பதாவது: நடப்பு 2024-25ம் ஆண்டுக்கான பல்வேறு அத்தியாவசிய பொருட்களை, இறக்குமதி செய்வதற்கான தடைகளை நீக்கி, ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்கு இந்திய அரசுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை