உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடனுக்கான வட்டியை மேலும் உயர்த்த எஸ்.பி.ஐ., திட்டம்

கடனுக்கான வட்டியை மேலும் உயர்த்த எஸ்.பி.ஐ., திட்டம்

மும்பை : நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை எஸ்.பி.ஐ., மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. எஸ்.பி.ஐ., கடந்த வாரம் கடன்களுக்கான வட்டியை 10 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு உயர்த்தி அறிவித்திருந்த நிலையில் தற்போது நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சூசகமாக தெரிவித்து உள்ளது.இதையடுத்து நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 10 முதல் 15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.அண்மையில் நடந்த ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை கூட்டத்தில், கடன் மற்றும் டிபாசிட் வளர்ச்சி விகிதங்களுக்குடையேயான இடைவெளியை கருத்தில் கொண்டு, வங்கிகள் தங்கள் வணிக செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு, ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கேட்டுக்கொண்டார். இதையடுத்து எஸ்.பி.ஐ., தனது கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை