உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஒரே நாளில் 4.10 கோடி நெப்ட் பரிவர்த்தனை

ஒரே நாளில் 4.10 கோடி நெப்ட் பரிவர்த்தனை

புதுடில்லி:'நெப்ட்' என்னும் 'தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்' வாயிலாக, பிப்ரவரி 29ம் தேதி, ஒரே நாளில் 4.10 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே, நெப்ட் முறையில், இதுவரை ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச பரிவர்த்தனைகளாகும். நெப்ட் மற்றும் 'ஆர்.டி.ஜி.எஸ்' இரண்டும் பணப் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படுபவை. இவற்றை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது.ஆர்.டி.ஜி.எஸ்., வாயிலாக கடந்தாண்டு மார்ச் 31ம் தேதி, ஒரே நாளில் அதிகபட்சமாக 16.25 லட்சம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை