உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி பெண்கள் கமிஷனில் 52 ஊழியர் நீக்கம் ஆவணங்களை கிளறிய கவர்னர்

டில்லி பெண்கள் கமிஷனில் 52 ஊழியர் நீக்கம் ஆவணங்களை கிளறிய கவர்னர்

புதுடில்லி உரிய அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாகக் கூறி, டில்லி பெண்கள் கமிஷனில் பணியாற்றிய 52 ஒப்பந்த ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள டில்லி பெண்கள் கமிஷனில் சட்டவிரோதமாக பலர், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

ஒப்புதல்

கடந்த 2017ல் இது தொடர்பாக விசாரிக்க, அப்போதைய தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2017 ஜூனில் தன் அறிக்கையை தாக்கல் செய்தது. இதன்படி டில்லி பெண்கள் கமிஷனில், 223 பணியிடங்கள் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.இந்த பணியிடங்களில் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்களை நீக்குவதற்கு, டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை பரிந்துரை செய்திருந்தது. இதை ஏற்று, அந்தப் பணியிடங்களில் சேர்ந்தவர்களை நீக்குவதற்கு துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, சட்ட விரோதமாக பணியில் சேர்க்கப்பட்ட 52 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கி, டில்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.முன்னதாக, 223 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 223 பணியிடங்கள் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டதாகவும், 52 பேர் மட்டுமே பணியில் சேர்க்கப்பட்டதாகவும், டில்லி அரசு விளக்கம் அளித்து உள்ளது.இந்நிலையில், இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு, டில்லி பெண்கள் கமிஷன் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மியின் தற்போதைய ராஜ்யசபா எம்.பி.,யுமான ஸ்வாதி மலிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

போராட்டம்

இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:டில்லி பெண்கள் கமிஷனில், 90 பேர் பணியாற்றுகின்றனர். இதில், எட்டு பேர் மட்டுமே அரசால் நியமிக்கப்பட்டவர்கள்.மற்ற இடங்களுக்கான ஊழியர்களை நியமிக்கவில்லை. இதனால், ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இவை சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட பதவிகளும் இல்லை. துணை நிலை கவர்னர், துக்ளக் ஆட்சி நடத்தி வருகிறார். இதை எதிர்த்து போராடுவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

jayvee
மே 03, 2024 11:05

தமிழகத்தில் பல துறைகளில் குறிப்பாக போக்குவரத்து கழகம், மின்சாரம், சத்துணவு, டாஸ்மாக் துறைகளில் வேலைவாய்ப்பு பதிவுகளை கணக்கில் கொள்ளாமல் அரசியல்வாதிகளின் ஆசியுடன் பல ஆயிரம் ஊழியர்கள் கடந்த ஐம்பது வருடங்களாக பதவி அமர்த்தபட்டுள்ளனர் ஒருவர் இந்த ஊழலில் சிறையில் உள்ளார் இதன் விளைவு ஊழியர்கள் இரன்டு திராவிட கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு சார்பாக உள்ள தொழிற்சங்கத்தில் சேர்க்கப்பட்டு போராட்டம் வேலை நிறுத்தம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகின்றனர்


ஆரூர் ரங்
மே 03, 2024 10:25

1970 இல் திமுக கட்டுபாட்டில் இருந்த சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழல் இதன் முதல் முன்னோடி . அப்போது கலைக்கப்பட்ட மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக தேர்தலே நடத்தவில்லை. திராவிட மாடல் முறைகேடுகள் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடி.


sundar
மே 03, 2024 08:34

Dravidian Model is being popularized throughout the country by opposition parties in power.


Duruvesan
மே 03, 2024 06:14

இவனுங்க கட்டுமரத்துக்கு குரு போல, ஒரு இடம் உடல, இதுல எவ்வளவு காசு பார்த்தானுங்களோ?


Indhuindian
மே 03, 2024 05:52

ஒன்னு நல்லா தெரியுது நம்ம செந்தில் பாலாஜி மாடல் ரொம்ப பாப்புலராக இருக்கு இங்கே ஐம்பத்து பேரை தூக்கிட்டாங்க நம்ம தீதி மாநிலத்துலே இருவைத்துநாலாயிரம் பேரை வேலையிலேந்து தூக்க சொல்லி உயர் நீதி மன்றம் சொல்லிடிச்சு இதுலே ரொம்ப திறமை சாலியான நம்மவூர்காரரூ ஜெயில்லேந்து ஆன்லைன்ல கிளாஸ் எடுக்கலாம் நமக்கு தெரிஞ்சதை கத்துக்கணுங்கறவளுக்கு சொல்லிகுடுக்கவேணாமா


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை