உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் ஏட்டு பலி

விபத்தில் ஏட்டு பலி

முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில், கார் மீது லாரி மோதி தலைமை போலீஸ்காரர் உயிரிழந்தார்.உ.பி., மாநிலம் ஹாபூரில் தலைமை போலீஸ்காரராக பணியாற்றியவர் அனுஜ் சர்மா,40. நேற்று முன் தினம் இரவு, தன் காரில், டில்லி - -டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கட்டவுலி வீர் தாபா அருகே பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியதில் கார் கவிழ்ந்தது. அனுஷ் சர்மா அதே இடத்தில் உயிரிழந்தார்.தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை