| ADDED : ஜூலை 28, 2024 04:20 AM
மும்பை: “சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்துவது குறித்து, அடுத்த சில நாட்களில் அரசு முடிவெடுக்கும்,” என மத்-திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் லாபகரமான நியாய விலை ஆண்டுதோறும் உயர்த்தப்பட்ட போதிலும், சர்க்கரைக்-கான குறைந்தபட்ச விற்பனை விலை கடந்த 2019ம் ஆண்டு முதல் மாறாமல், கிலோ ஒன்றுக்கு 31 ரூபாயாக உள்ளது. உற்-பத்தி செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், ஆலைகள் இயங்-குவதற்கு ஏற்ற வகையில், இந்த குறைந்தபட்ச விற்பனை விலையை உயர்த்தி வழங்குமாறு தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு அரசை வலியுறுத்தி வருகிறது. இது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறி-னார்.இம்மாநாட்டில் பங்கேற்ற ஜி - 20 அமைப்புக்கான இந்திய துாதர் அமிதாப் காந்த் கூறியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சர்க்கரை உற்பத்தி துறை 1.10 சதவீதம் பங்களிக்-கிறது. இது, எரிசக்தி மாற்றம், சுழற்சி பொருளாதாரத்தை ஊக்கு-வித்தல் மற்றும் கார்பன் உமிழ்வு நிகர பூஜ்ஜியத்தை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், சர்க்கரை உற்பத்தித் துறைக்கு, நிலையான கொள்கை முடிவு தேவை.வரும் 2047ம் ஆண்டுக்குள், இந்தியாவை வளர்ந்த பொருளாதார-மாக மாற்றுவதில், சர்க்கரை உற்பத்தி தொழில் முக்கிய உந்துத-லாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.