உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4ம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

4ம் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

புதுடில்லி, லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப் பதிவு இன்று நடக்கிறது. தொடர்ந்து ஏழு கட்டங்களாக ஜூன் 1 வரை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், மே 13ல் நடக்கவுள்ள நான்காம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் துவங்கியது. நான்காம் கட்ட தேர்தலில் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் ஜம்மு ---- காஷ்மீர் யூனியன் பிரதேசம் உட்பட 96 லோக்சபா தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் இணைந்து மாநில சட்டசபைக்கான தேர்தலும் நடக்கிறது. இங்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 25; வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் ஏப்., 29 என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை