மேலும் செய்திகள்
அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
1 minutes ago
வேங்கடாசலபதி கோவிலில் கருடசேவை வீதியுலா
2 minutes ago
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
1 hour(s) ago
புதுடில்லி,டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ருத்ரா - 2 ஏவுகணையை உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.நிலப்பரப்பு மற்றும் கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை, துல்லியமாக அழிக்கும் திறன் பெற்ற ருத்ரா - 2 ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.ஒடிசா கடற்கரையில் உள்ள இந்திய விமானப் படை தளத்தில் இருந்து, சுகோய் - 30 ரக போர் விமானத்தில் இருந்து காலை 11:30 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது. நடுக்கடலில் உள்ள கப்பல் உட்பட பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோ - ஆப்டிகல் சிஸ்டம், ரேடார் மற்றும் டெலிமெட்ரி நிலையங்கள் போன்ற கண்காணிப்பு கருவிகள் வாயிலாக, ருத்ரா - 2 ஏவுகணையின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏவுகணை சோதனைக்கு வாழ்த்து தெரிவித்த நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இதில் பணி புரிந்த டி.ஆர்.டி.ஓ.,குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
1 minutes ago
2 minutes ago
1 hour(s) ago