உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷா குறித்து பேச்சு: விளக்கம் கேட்டு ஜெய்ராம் ரமேஷூக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

அமித்ஷா குறித்து பேச்சு: விளக்கம் கேட்டு ஜெய்ராம் ரமேஷூக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ''ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 150 மாவட்ட கலெக்டர்களிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். இந்த மிரட்டல் அப்பட்டமானது. பா.ஜ., எந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டுகிறது'' என எக்ஸ் சமூகவலைதளத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2004ம் ஆண்டு போலவே நடக்கும்

நிருபர்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டி: அரசியலமைப்பு சட்டத்தின் படி, தேர்தல் கமிஷன் நடுநிலையாக இருக்க வேண்டும். கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மட்டுமின்றி, தேர்தல் கமிஷனையும் மக்கள் கவனித்து வருகின்றனர். ஆனால், இதுவரை தேர்தல் கமிஷன் செயல்பட்ட விதம் மக்களுக்கு தெரியும். 2004ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., அரசு மீண்டும் ஆட்சியமைக்கும் என சொன்னது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது. 2004ம் ஆண்டு போலவே இப்போதும் நடக்கும். அதேபோல் 20 ஆண்டுகள் கழித்து இப்போது வரலாறு திரும்பும். 2004ம் ஆண்டு போலவே இப்போதும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Anbuselvan
ஜூன் 02, 2024 22:34

பிஜேபி என்ன சொல்லுதுன்னா 1984 இம்முறை பிஜேபிக்கு சாதகமா அமையும்னு. 1994 ல் காங்கிரஸ் 414 சீட்டுகள் கிடைத்ததை நினைவு கூறுகிற மாதிரி சொல்லும்.


duruvasar
ஜூன் 02, 2024 20:18

அப்புறம் எதுக்கு இப்படி மொட்டை மாடியில் நின்று கூறுகிறீர்கள்.ஜெயிங்க யார் வேண்டாமென்று சொன்னது. கட்டாயம் ஜீன் 4 ந்தேதிக்கு பிறகு இந்தியாவில் நடந்த தேர்தல் நியாயமாக நடக்கவில்லை வாஷ்ங்டன் டைம்ஸில் ஒரு கட்டுரை வெளிவரும். பிரிட்டிஷ் மாத்திரைக்கு மண் இதை ஆமோதித்து செய்தி வெளியிடுவார்கள். தமிழக ஊடகங்களில் தேர்தல் முடிவை விட இந்த பத்திரிகை செய்தியை மையப்படுத்தி விவாதங்கள் நடைபெறும்.


Nagarajan S
ஜூன் 02, 2024 20:01

தேர்தல் தோல்வி பயத்தில் வாய்க்கு வந்தவாறு உளறுவதே வேலையாக போய்விட்டது இந்த இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு.


A1Suresh
ஜூன் 02, 2024 19:43

சிறை தண்டனை தாருங்கள். கருணை மட்டும் காட்டவே வேண்டாம்


M Ramachandran
ஜூன் 02, 2024 19:22

இந்த கிழட்டு கும்பல்ளுக்கு வேலையில்லாமால் வெறுப்பைய்ய உமிழ்வது தான் வேலை. சரியான கிரிமினல் கேசு போட்டு சொச்சா காலத்திற்கும் திகாரில் களித்திண்ண வைத்தால் தான் சார் படும்


J.V. Iyer
ஜூன் 02, 2024 18:51

இவர்கள் எல்லோரும் திகார் சிறைக்கு செல்வது உறுதி. எதற்கு சொந்தப்பணத்தில் இப்போதே சூனியம் வைத்துக்கொள்கிறார்கள்?


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2024 18:46

தெருநாயின் குறைப்பு / ஊளை மக்கள் குரல் / உளறல் ரெண்டும் ஒன்றே என்ற அளவில் சுதந்திரம் உள்ளது இந்தியாவில் உள்ளது இது மிக மிக மோசமான ஒரு சட்டம் / Constitution. சட்டம் இப்படி மாற்றப்படவேண்டும் . 1 பிச்சைக்காரன் பைத்தியம் சாதாரணன் இவர்களுக்கு பேச்சுரிமை - 100% 2 படித்தவர்கள் பேச்சுரிமை - 80% 3 மிகப்பெரும்பதவியில் உள்ளவர்கள் பேச்சுரிமை - 60% 4 அரசியலில் உள்ளவர்களின் பேச்சுரிமை - 40% 5 மேடையில் பேசும் அரசியல்வாதிகளின் பேச்சுரிமை - 20% இதைத்தாண்டும் போது இவர்களுக்கு ஜெயில் வாசம் கட்டாயம்


Krishna
ஜூன் 02, 2024 18:19

இவர் எப்படி இன்னம் உள்ளெ போகாமல் இருக்கார். இவரை நான் படித்த மனிதர் என்று எண்ணினேன். ஆனால் இவர் வேறு மாதிரி என்று நடந்து கொண்டுவிட்டார்.


GoK
ஜூன் 02, 2024 18:08

பேச்சு உரிமையை தப்பாக பயன்படுத்துவதில் இவர் முன்னிலை படிப்பு இருந்து என்ன பயன் பண்பில்லையே


Barakat Ali
ஜூன் 02, 2024 17:45

சேஷனை அடக்க ஒரு நபர் கமிஷனை மூன்று நபர் கமிஷனாக மாற்றிய கட்சி எது ????


rama adhavan
ஜூன் 02, 2024 18:43

எத்தனை நபர் கமிஷன் இருந்தாலும் உண்மை தானே வரும்? இதில் என்ன கருத்து உள்ளது?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை