உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். கேரளாவின் வயநாட்டில், ஜூலை 30ம் தேதி கனமழையுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டக்கை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதுவரை, 225 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்; 130 பேரை காணவில்லை.இந்நிலையில், இன்று( ஆகஸ்ட்14) வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். மேலும் அவர், ''படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வாடகை உதவித் தொகை வழங்கப்படும்'' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஆக 14, 2024 20:38

ஒரு சில இடங்களில் ஒட்டுமொத்த குடும்பமே அழிந்துபோயிருக்கிறதே... அப்படி என்றால் நிவாரணம் யாருக்கு கொடுப்பீர்கள்?


M Ramachandran
ஆக 14, 2024 20:23

பாவம் கேரள மக்கள் 5 லட்சம் தான் அஅஆனால் இவர்களுக்கு கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் கொடுத்த அரசியல் வாதிகள் அதிகம் பாத்து லட்சம் இழப்பீடு என்ற பெயரில் லஞ்சம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை