உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "கல்வராயன் மலை பகுதிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தணும்: உயர்நீதிமன்றம்

"கல்வராயன் மலை பகுதிக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தணும்: உயர்நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்த வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்வராயன் மலையில் வசித்து வரும் மக்கள் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c5fpaxtz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று மக்கள் நிலையை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர் உதயநிதி சென்று பார்வையிட வேண்டும்.நாங்கள் சென்று பார்வையிடுவதை விட அமைச்சர்கள் சென்றால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். கல்வராயன் மலைப்பகுதியில் சாலை வசதி, ரேஷன் கடைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.கல்வராயன் மலைப்பகுதி மக்களின் நிலை குறித்து, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து, வழக்கு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Ramesh Sargam
ஜூலை 24, 2024 20:17

முதல்வர் அப்படி ஆய்வு நடத்தவில்லை என்றால், உயர்நீதிமன்றம் முதல்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமா? எடுக்கவேண்டும். நீதிமன்றம் முன்பு எல்லோரும் ஒன்றே.


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 18:43

எதுக்குப் போகணும்? பிரச்சினை கள்ளச்சாராயம் குடிப்பதுதான். பாலிடாயில் குடிப்பது இல்லையே.


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 18:40

கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பதால் பாதிக்கப்படுவது மது ஆலை நடத்தும் அப்பிராணி திமுக தான் மை லாட். அவர்களையே அலைய விடலாமா?


tmranganathan
ஜூலை 24, 2024 17:13

எப்ப பார்த்தாலும் தந் தந்தை நினைவகங்களாய் மட்டுமே பார்க்கணுமா? மக்கள் நலனில் கோர்ட் ஆணை படி பிள்ளை கையை பிடித்துண்டு மலையேறி பார்க்கணும் மக்கள் அவதிகளை. இல்லையேல் 26இல் கோவிந்தாதான்.


D.Ambujavalli
ஜூலை 24, 2024 16:27

கட்சிக்குள்ளும், தொண்டர்களிடையும். கிளம்பியுள்ள 'துணை முதல்வர்' வதந்திகள் கோர்ட் வரை சென்று விட்டதா ? மதுவிலக்கு, ஆயத்தீர்வைக்கு என்று ஒரு அமைச்சர் இருக்கிறாரே, அவர் ஓரங்கட்டப்பட்டு, உதயநிதி அங்கு என்ன சாதிக்கப் போகிறார் ?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 24, 2024 15:51

ஒரு குவளையில் வாங்கி குடித்துப் பார்த்து, இது நல்ல சரக்கா இல்லை கள்ள சரக்கா என்று கேட்கலாம். சரக்கில் சர்க்கரை சேர்ப்பீர்களா இல்லை வெல்லம் சேர்ப்பீர்களா என்று கேட்கலாம். முதல்வரின் உதவிகள் தடையின்றி கிடைக்கிறதா என்று விசாரிக்கலாம். இறுதியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கலாம். செய்யுங்க.


lana
ஜூலை 24, 2024 15:11

அப்படியே வேங்கை வயலுக்கு இந்த மந்திரிகளை போக சொல்லுங்க மை லார்ட்


Rengaraj
ஜூலை 24, 2024 14:53

தமிழகம் சமூக மேம்பாட்டில் முதலிடம் என்று பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் முதல்வரை அறிவுறுத்தி பார்க்கவைக்க வேண்டிய அவலத்தில் அந்த பகுதி கல்வராயன் மலை இருக்கிறது. வெட்கக்கேடான மாடல் ஆட்சி


Raja
ஜூலை 24, 2024 14:47

நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடுகள் கேவலமாக உள்ளது, 67 பேர் இறந்துள்ளனர், முதல்வரோ அவரது மகனோ இந்த சம்பவம் குறித்து கவலை கொள்ள போவதில்லை. குடும்பம் நன்றாக இருந்தால் போதும் அவர்களுக்கு.


Anand
ஜூலை 24, 2024 14:41

அதற்கு முன் அங்கு சிமெண்ட் சாலை போடவேண்டும், கூடவே கேரவன், சூட்டிங்கிற்கு தேவையான அனைத்தும் ஏற்பாடு செய்யவேண்டும்..... சூட்டிங் ஐந்து நிமிடம் மட்டுமே......


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை