உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐதராபாத் மக்கள் கால்நடைகள் அல்ல: பிரதமருக்கு ஓவைசி பதில்

ஐதராபாத் மக்கள் கால்நடைகள் அல்ல: பிரதமருக்கு ஓவைசி பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'காங்கிரசும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சியும், ஹைதராபாத் தொகுதியை ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக' பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஓவைசி, 'ஹைதராபாத் மக்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல' எனக் கூறினார்.பிரதமர் மோடி நேற்று (மே 8) தெலுங்கானாவில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், 'தெலுங்கானாவின் ஹைதராபாத் தொகுதியை காங்கிரசும், பி.ஆர்.எஸ்., கட்சியும் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு குத்தகைக்கு விட்டுள்ளது' என விமர்சித்திருந்தார்.இதற்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி கூறியதாவது: ஹைதராபாத் தொகுதியை ஓவைசிக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக மோடி பேசுகிறார். குத்தகைக்கு விடுவதற்கு ஹைதராபாத் மக்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல. அவர்கள் குடிமகன்கள்; எந்தவொரு கட்சிக்கும் சொந்தமானவர்கள் அல்ல. கடந்த 40 ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் இந்துத்துவாவின் தீய சித்தாந்தத்தை தோற்கடித்து, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியை நம்பியுள்ளனர். இந்துத்துவா மீண்டும் தோற்கடிக்கப்படும். தேர்தல் பத்திரங்கள் மூலம் தனது கட்சிக்கு 6,000 கோடி ரூபாய் நன்கொடை அளித்தவர்களிடம் மோடி தொடர்பில் உள்ளார். நன்கொடைக்கு பதிலாக, அவர்களுக்கு இந்தியாவின் சொத்துக்களை குத்தகைக்கு விற்றுள்ளார். 70 கோடி இந்தியர்களை விட 21 பேரிடம் அதிக சொத்து உள்ளது. அந்த 21 பேரும்தான் மோடியின் உண்மையான குடும்பத்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
மே 10, 2024 06:16

எப்பவும் கறிக்கடை ஞாபகத்திலே இருக்கீங்க பாய், கொஞ்சம் மாறுங்கள். காங்கிரஸின் இந்து துவேசத்தை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் உங்க ஆட்டம் எல்லாம் நடக்காது பாயீ


Jai
மே 09, 2024 21:40

அரைமணி நேரம் போலீஸ் மற்றும் படைகளை நிறுத்தி வையுங்கள், இந்துக்களை முடித்து கட்டுவோம் என்று கூறுவது என்ன நினைப்பில்? ஆடுமாடுகளா?


R Kay
மே 09, 2024 16:39

ஆப்பிரிக்கர்கள் என்ற கான்+க்ராஸின் கருத்திற்கு முதலில் கண்டனம் தெரிவியுங்கள்


Ramesh Sargam
மே 09, 2024 12:41

ஓவைசி போன்ற தேசதுரோகிகளை, பாகிஸ்தான் உளவாளிகளை நாட்டை விட்டே துரத்தவேண்டும் அவர்கள் நம் நாட்டில் இருக்கும்வரையில் நமக்கு பிரச்சினைதான்


தமிழ்வேள்
மே 09, 2024 12:24

நிஜாமின் ராஜாக்கர்களை ஸ்ரீ வல்லபாய் படேல் வெளுத்துக் கட்டியதைப்போல , இந்த பயலையும் வெளுத்து கட்டினால்தான் சரிபட்டுவரும் கடுமை இல்லை என்றால் இவர்கள் பாரத அரசை கிள்ளுக்கீரையாக நினைக்கக்கூடியவர்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை