உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது": கவர்னர் ரவி குற்றச்சாட்டு

"உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது": கவர்னர் ரவி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வுகள் நடத்தியவர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: சுதந்திர போராட்ட தலைவர்கள் ஜாதி தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். மொழியாலும், மாநிலத்தாலும் பிரிந்து உள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

வரலாறு

உண்மையான சுதந்திரப் போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை நாம் வெளிக்கொண்டு வர வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு முதலில் அறியப்படாத 100 சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி ஆராய வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் பெரிதளவில் தங்கள் பங்கை அளித்துள்ளார்கள்.

சந்தோசம்

அதற்கு, மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் முன் வந்து மிக சிறப்பாக சேவையை செய்துள்ளார்கள். இந்த எண்ணம் தொடர வேண்டும். சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்த வீரர்களின் வேர்வையாலும், ரத்தத்தாலும் தான் நாம் இப்போது நன்கு சந்தோசமாக வாழ்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

முருகன்
ஜூன் 16, 2024 23:19

வேலை இல்லாமல் இருந்தால் இப்படி தான் யோசிக்க தேற்றும்


M S RAGHUNATHAN
ஜூன் 16, 2024 21:49

இன்று ராவணா தொலைக் காட்சியில் திரு ஏகலவ்யன் ஒரு அருமையான பதிவு போட்டு இருந்தார். ஒரு சமூக போராளி, சுதந்திரத்திற்காக போராடியவர், தாழ்த்தப் பட்ட மக்களுக்குகாக தன் அனைத்து சொத்தையும் அர்ப்பணித்தவர் அவரைப் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை என்று வருத்தப் பட்டார். அவர் ஒரு பிராமணர் என்ற ஒரே காரணத்தினால் அவர் தியாகம் மறைக்கப் பட்டது என்று மிகவும் மன வருத்தத்துடன் பேசி இருந்தார். அவர் பெயர் லக்ஷ்மண ஐயர். கோபிசெட்டிபாளையம் ஊரை சேர்ந்தவர். சுமார் 800 acre நிலபுலன்களை அரசுக்கும், தலித் மக்கள் முன்னேறவும் கொடுத்த மகான். ஆனால் EVR,, Karunanidhi ஆகியோருக்கு ஊருக்கு ஊரு சிலை, நினைவிடம். என்ன சாதித்தார்கள் இவர்கள். அதுவும் கருணாநிதி அடித்த கொள்ளை சொல்லி மாளாது. திருச்சி வேலுச்சாமி அவர்களை கேட்டால் லக்ஷ்மண ஐயர் பற்றி விவரம் சொல்வார். காங்கிரஸ் அத்தகைய மகான்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் எழுச்சி பெற வழியுண்டு.


சோழநாடன்
ஜூன் 16, 2024 21:32

அரசு வெளியிட்டுள்ள இந்திய விடுதலை வரலாற்றில் இவை மறைக்கப்பட வாய்ப்பில்லையே. அப்படியானால் மத்திய அரசும் விடுதலை வரலாற்றை மறைந்தே வெளியிட்டுள்ளதுபோது தமிழ்நாடு அரசும் மறைத்திருப்பது நியாயம்தானே. இந்திய விடுதலை வரலாற்றில் பாரதிக்கு மட்டுமே இருவரிகள். கப்பல் ஓட்டிய தமிழன் வஊசிக்கு எத்தனைப் பக்கம் ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. ஒரு வரிகூட கிடையாது என்பதை ஆர்என் இரவி உணரவேண்டும். இப்படி சல்லித்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறக்கூடாது. போஸ்மேன் வேலைக்கு வந்தமா..... சம்பளம் வாங்கி கஞ்சிக்குடிச்சமான்னு இருக்கணும்.


Prasanna Krishnan R
ஜூன் 17, 2024 11:02

You mind your language. How dare you to talk about Governor? He knows better than you about real Tamil freedom fighters.


T.sthivinayagam
ஜூன் 16, 2024 21:30

இந்திய பிரதமரை மோடிஜியை விட அதிக அதிகாரம் உள்ள வராக தமிழக கவர்னர் திகழ்கிரார் என்று பாஜாகவினர் கூறுகின்றனர்


T.sthivinayagam
ஜூன் 16, 2024 21:08

தமிழக குடிமகன் அனைவரும் சுதந்திர போராட்ட வீர்ர்கள் தான் பீகாரின் உயர் மட்ட அரசியலை இங்கே தினிக்க வேண்டாம்


venugopal s
ஜூன் 16, 2024 19:56

திராவிட சித்தாந்தம் மற்றும் திராவிடர்கள் குறித்து தமிழக மக்களை விட பாஜகவினர் தான் அதிகம் கவலைப்படுகின்றனர்! தமிழக மக்கள் தெளிவாகவே உள்ளனர்.


என்றும் இந்தியன்
ஜூன் 16, 2024 18:15

எந்த உண்மையையும் அரைப்பது/மறைப்பது தானே திருட்டு திராவிடத்தின் ஒரே அஜெண்டா/வழிமுறை


T.sthivinayagam
ஜூன் 16, 2024 18:11

கோவிலுக்கு பணிக்கு வந்தவர்கள் கோவிலை சொந்தம் கொண்டாடும் வகையில் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்


Kasimani Baskaran
ஜூன் 16, 2024 19:49

கடவுள் இல்லை என்று சொன்ன கம்பிகளுக்கு கோவிலுக்குள் என்ன வேலை? சர்ச்சில் மசூதியில் சென்று கடவுள் இல்லை என்று நாட்டாண்மை செய்ய வேண்டியதுதானே?


rama adhavan
ஜூன் 16, 2024 20:14

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுபவர்கள் இது போன்ற அறிவிலிகள். சுதந்திர வரலாற்று வீரர்களைப் பற்றி தெரிந்தால் பேசவும். இல்லை என்றால் ?.


GMM
ஜூன் 16, 2024 18:01

சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தில் உண்மை மறைப்பு. அது போல் தமிழர் வரலாறு, சமய நூல்கள் மறைக்கப்பட்டு, புனையப்பட்ட வரலாறு திணிக்கப்பட்டுள்ளது. அந்நியர்கள் செய்த அக்கிரமங்கள் வரலாற்றில் முழுவதும் மறைப்பு. உண்மை எடுத்து கூற முன்னோர்கள் இல்லை. இல்லாத திராவிடம் உருவாக்கபட்டது. காங்கிரஸ் கண்ட மொழி வாரி மாநிலங்கள் பிரிவினை எண்ணம் தான் வளர்த்து வருகிறது. கோவையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் பேசும் மக்கள் சரிசமமாக இருப்பர். ஆனால், மாநில மொழி தமிழ். மொழி வாரி மாநிலம் பயனற்றது என்பதற்கு பல ஊர்கள் உள்ளன. மொழி வாரி மாநிலங்களை நீக்கி, நான்கு மாகாணங்கள் ஆக்க வேண்டும். மாநிலங்கள் வரி பணத்தை சரியான பணி ஒதுக்கீடு இல்லாமல், அதிக அதிகாரம் எடுத்து கொண்டு விரயம் செய்து வருகின்றன.


Kasimani Baskaran
ஜூன் 16, 2024 17:59

மொழிவாரியாக மாநிலங்கள் பிரித்து அதன் பின்னர் தமிழகத்தில் திராவிடர்களுக்கு என்று கட்சி ஆரம்பித்தார்கள் - அதன் பின்னர் அது திராவிடர்களை மட்டும் முன்னேற உழைத்தது. இன்று அது தமிழனுக்கே திராவிட லேபல் ஒட்டி இன்புற்று இலவசமாக வாக்குகளை வாங்கி குவிக்கிறது. தமிழன் திராவிடன் அல்ல. திராவிட ஆதிக்கத்தில் இருந்து தமிழனுக்கு விடுதலை வேண்டும்.


ரவீஷ்
ஜூன் 16, 2024 19:06

திராவிட ஆதிக்கத்துக்கு முன் உயர் சாதியினர் ஆதிக்கம் பிராம்மணர் ஆதிக்கம்.இருந்தது மறந்து போச்சு.


M Ramachandran
ஜூன் 16, 2024 20:06

திராவிடர் என்ற சொல்லுக்கு உண்மையை மறைத்து தவறாக அர்த்தம் கற்பித்து உதவாகரை தற்குறி கும்பல். பார்ப்பனர்கள் மேல் வெறுப்பைய்ய உமிழ்ந்து அதனால் கவி பாரதி, தமிழ் தாத்தா என்று கூறப்ட்ட உ வே சாமிநாதய்யரையும் தமிழுக்கா தன் சமஸ்கிருத பெயரையெ மாற்றி கொண்ட சூரிய நாராயன சாஸ்திரிகள் என்ற மறைய்ய மலர் அடிகள் லட்சுமி பாய் மா போ சி போன்றோராகளையும் கீ ஆ பெ அவர்களையும் தமிழுக்கா உண்மையாகா உழைத்தவர்களையும் மறந்து சுய னலமிகள் பெயரையும் தமிழர்களுக்கு தீங்கிழைத்தவர்கள் கொலைய்ய செய்தவர்கள் தமிழரை நாகரித்திர்க்கு ஊரு செய்ய துணிந்த பலதார பான்னாடைய்யகளையும் களையும் வைத்து மகிழும் காலத்தில் சுதந்திர போராட்ட காரர்களை தமிழர் தியாக உள்ளங்களை நம் சரித்திரத்திலிருந்து நீக்கி மகிழும் உதவாகரை காரர்கள் காலம் இது.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை