உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்து கோயிலை இடித்தே அத்தலா மசூதி கட்டப்பட்டது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் உ.பி., நீதிமன்றத்தில் வழக்கு

ஹிந்து கோயிலை இடித்தே அத்தலா மசூதி கட்டப்பட்டது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் உ.பி., நீதிமன்றத்தில் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி., மாநிலம் ஜோன்பூரில் உள்ள அத்தலா மசூதி, 14ம் நூற்றாண்டில் ஹிந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக தொல்லியல் துறை ஆய்வு உள்ளிட்ட ஆதாரங்களுடன் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. தற்போது இது உ.பி., சன்னி மத்திய வக்பு வாரியத்தின் சொத்தாக உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று சின்னமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தலா மசூதி, முன்பு கோயிலாக இருந்ததாக பிரபல வழக்கறிஞர் அஜய் பிரதாப் சிங், ஜோன்பூரின் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கோயில் இடிப்பு

அதில், '14ம் நூற்றாண்டில் ஜோன்பூர் பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஜெய்சந்திரா ரத்தோர், அத்தலா மாதா எனும் பெயரில் கோயில் கட்டினார். அதன்பிறகு ஆட்சியை பிடித்த பெரோஸ் ஷா, 1377ல் அக்கோயிலை இடிக்க உத்தரவிட்டார். அப்பகுதியினர் இதனை தடுக்க முயன்றும், முடியாததால் அனைவரும் அந்த பகுதியை காலி செய்துவிட்டு அருகிலுள்ள கிராமங்களில் குடியேறினர். கோயிலை இடித்து அங்கு கட்டப்பட்ட ஷாஹி அத்தலா மசூதியை பெரோஸ் ஷாவுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த இப்ராஹிம் ஷா 1408ல் கட்டி முடித்துள்ளார்.

ஹிந்து கட்டடக் கலை

அந்த அத்தலா மசூதியின் கட்டடங்களில் இன்றும் செம்பருத்தி, திரிசூலம், மணி உள்ளிட்ட ஓவியங்களும், ஹிந்துக் கோயில் கட்டடக்கலை வடிவில் தூண்கள் செதுக்கப்பட்டுள்ளதையும் காணலாம். இவற்றை கோல்கட்டா ஓவியக் கலைக் கல்லூரி முதல்வர் ஈ.பி.ஹவேலி ஆய்வுசெய்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டதுடன், இந்திய தொல்லியல் துறை இயக்குநரின் ஆய்வுகளையும் சில வரலாற்று நூல்களையும் இணைத்துள்ளார். இந்த மனுவை நீதிபதி கிரண் மிஸ்ரா விசாரணைக்கு ஏற்றுள்ளார்.இந்த வழக்கு நாளை மறுநாள் (மே 22) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அயோத்தி வழக்கில் ஹிந்துக்களுக்கு சாதகமான தீர்ப்பை 2019ல் உச்சநீதிமன்றம் வழங்கியது. அதன்பிறகு, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி, மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை ஒட்டியுள்ள ஷாஹி ஈத்கா மசூதி ஆகியவை தொடர்பாக வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளன. அந்த வரிசையில் ஜோன்பூரில் உள்ள அத்தலா மசூதியும் இணைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Seran Manian
மே 23, 2024 10:19

இது போன்ற பதிவுகளை செய்தி என்று பதிப்பிட்டு மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டாம்


N Sasikumar Yadhav
மே 20, 2024 21:14

இழந்த வரலாறை மீட்டெடுக்கும் காலம் இது மோடிஜி ஆட்சி பொற்காலம்


subramanian
மே 20, 2024 21:02

முஸ்லிம் பெரியவர்கள் தாங்களே முன்வந்து கோவில் இடங்களில் உள்ள மசூதிகளையும் இந்து மக்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் அரசியல் வாதிகள் பேச்சு கேட்டு குழம்பிப் போய் தவறு செய்ய கூடாது


K V Ramadoss
மே 23, 2024 08:00

அதற்கு பதில் வேறு இடத்தில் நிலம் கேட்டுப்பெறலாம்


என்றும் இந்தியன்
மே 20, 2024 16:45

வேடிக்கை என்னவென்றால் முழுவதும் இடிக்கமாட்டார்கள் கோவிலை கல்தூண்கள் அப்படியே இருக்கும்???வழக்கு இழுக்க இழுக்க இன்பம் இறுதிவரை தொடரும்


Kasimani Baskaran
மே 20, 2024 16:27

கோவில்களை அழித்தால் இந்து மதத்தை அழித்து விடலாம் என்ற மூட நம்பிக்கைதான் அடிப்படைக்காரணம் திராவிடர்கள் கூட அப்படிதான் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்


S Ramkumar
மே 20, 2024 14:34

முதலில் வக்ப் சட்டம் ஒழிக்க பட வேண்டும்


GMM
மே 20, 2024 14:26

அமெரிக்கா போல் குடியேறி வளப்படுத்தி வாழ்வது வாழ்க்கை வளப்படுத்தி வாழ்ந்த இந்தியா போன்ற நாட்டை படையெடுத்து, ஆக்கிரமித்து, கோவில்களை இடித்து தன் வழிபாட்டு தலங்கள் உருவாக்குவது ஆக்கிரமிப்பு எத்தனை தலைமுறை ஆனாலும் உலகம் ஆக்கிரமிப்பாளர்கள் உரிமையை நீக்க வேண்டும் இதில் சர்வதேச சட்டம் அவசியம்


Tirunelveliகாரன்
மே 20, 2024 14:17

ஸ்டார்ட் மியூசிக்


Narayanan
மே 20, 2024 14:08

உலகெங்கிலும் சனாதன மதம் ஒன்று மட்டும்தான் இருந்தது காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம்தான் இன்றையநிலை


ganapathy
மே 20, 2024 13:49

காங்கிரஸும் திமுகவும் இதை எதிர்காது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை