| ADDED : ஜன 02, 2026 12:19 AM
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' மற்றும் நம் இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' போன்றவற்றுக்கு, போலி இ- - மெயில் அனுப்பிய டில்லியைச் சேர்ந்த நபர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. டில்லியைச் சேர்ந்த நிஷீத் கோலி என்பவர், இஸ்ரோ, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், பென்டகன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரைப் பயன்படுத்தி இ - மெயில் அனுப்பியுள்ளார். அ தில், 'இந்தியாவின் அடுத்த தலைமுறை ராணுவ ஜெட் இன்ஜின் உருவாக்கத்தில் இந்திய அர சுக்கும், உங்களுக்கும் என்னால் உதவ முடியும் . இத்திட்டத்தை மேற்கொள்ள எனக்கு பிரதமர் மோடியின் ஆசிர்வாதமும், வாழ்த்தும் உள்ளது. பிரதமரின் முதன்மை செயலர் மிஸ்ராவின் ஆதரவும் எனக்கு உள்ளது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இ - மெயிலை, அமெரிக்க கடற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் ஜார்ஜ் விகோபுக்கும் அவர் அனுப்பி இருந்தார். அவர் இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து விசாரித்த சி.பி.ஐ., அதிகாரிகள், போலி இ - மெயில் அனுப்பிய டில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த நிஷீத் கோலி என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.