மேலும் செய்திகள்
பீஹார் அரசியலில் நிதிஷ் வாரிசு: ஜேடியு செயல் தலைவர் கணிப்பு
5 hour(s) ago | 5
விசாகப்பட்டினம்: தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்றது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் சவாலில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்கா வெல்ல, தொடர் 1-1 என சமநிலை ஏற்பட்டது. வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் (ஆந்திரா) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணியின் துவக்க வீரர்களாக, குயிண்டன் டிகாக், ரியான் ரிக்கெல்டன் களமிறங்கினர். ரியான் ரிக்கெல்டன் பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் பவுமா, குயிண்டன் டிகாக் உடன் இணைந்து நிலைத்து நின்று ஆடினர்.குயிண்டன்டிகாக் சதம் விளாசல்:நிலைத்து விளையாடிய, குயிண்டன் டிகாக், 89 பந்துகளை சந்தித்து 6 சிக்சர்களும், 8 பவுண்டரிகளும் அடித்து சதம் (106 ரன்கள்)அடித்தார்.அதனை தொடர்ந்து கேப்டன் பவுமா , 5 பவுண்டர்கள் அடித்து 48 ரன்களுக்கு ரவிந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த மேத்தீவ் ப்ரீட்ஸ்க் 24 ரன்களும் பிரேவிஸ் 29 ரன்களும் சேர்த்து அவுட் ஆனார்கள்.குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சு:சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தென் ஆப்ரிக்கா வீரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்தினார். குல்தீப் பிரேவிஸ், ஜேன்சன், போஸ்க், லுங்கி நிகிடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுககளை வீழ்த்தினர்.இறுதியில் தென் ஆப்ரிக்க அணி, 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு, 271 ரன்கள் வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா நிர்ணயித்தது.இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களை சமாளித்து நிலைத்து நின்று ஆடினர். ஜெய்ஸ்வால் சதம்;ரோஹித் சர்மா, கோஹ்லி அரை சதம்:இதில் ரோஹித் சர்மா அரை சதம் (75 ரன்) அடித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். ஜெய்ஸ்வால் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 116 ரன் சேர்த்தார். 2 சிக்ஸர், 12 பவுண்டரிகள் விளாசினார்.அடுத்து வந்த விராத் கோஹ்லி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடியாக அரை சதம் அடித்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். இறுதியில் இந்திய அணி, 39.5 ஓவரிலியே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 271 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒரு நாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது.
ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்த நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்),விராட் கோலி (27,910 ரன்கள்)ராகுல் டிராவிட் (24,064 ரன்கள்) ஆகியோர் முறையே மூன்று இடத்தில் உள்ளனர். ரோஹித் சர்மா (20,000+ ரன்கள்) 4வது இடத்தில் உள்ளார்.
5 hour(s) ago | 5