உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடும் நிதி நெருக்கடியில் கேரள அரசு; 5 மாதங்களாக முதியோர் பென்ஷன் இல்லை

கடும் நிதி நெருக்கடியில் கேரள அரசு; 5 மாதங்களாக முதியோர் பென்ஷன் இல்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மூணாறு:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கேரள அரசு ஐந்து மாதங்களாக முதியோர் பென்ஷன் வழங்கவில்லை. இதனால் வறுமைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதியினர் கருணை கொலைக்கு தயாராக உள்ளதாக போஸ்டர் ஒட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் இடதுசாரி கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் ஆட்சி நடக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் மாநிலத்தில் பல்வேறு துறையினருக்கு மாத ஊதியம் காலதாமதமாகவே வழங்கப்படுகிறது. விதவை, முதியோர் உள்பட அனைத்து பென்ஷன்கள் கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.ஏற்கனவே இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே இருநூறு ஏக்கரைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி மரியகுட்டி நவ.7ல் மண்சட்டி ஏந்தி யாசகம் பெற்ற சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கி பினராயிக்கு கலக்கத்தை ஏற்படுத்தினர்.இந்நிலையில் வண்டிபெரியாறைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி பொன்னம்மா இருதினங்களுக்கு முன்பு வண்டி பெரியாறு, வள்ளக்கடவு ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். போக்குவரத்து தடைபட்டதால் போலீசார் பொன்னம்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பென்ஷன் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் ஒன்றரை மணி நேர போராட்டத்தை பொன்னம்மா கைவிட்டார்.

கருணை கொலைக்கு தயார்

அடிமாலி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குழாமாம்குழி குடியைச் சேர்ந்தவர் சிவதாசன் 72, இவரது மனைவி ஓமனா 63, மாற்றுத் திறனாளியாவார். இவர்கள் வன விளைபொருட்களை சேகரித்து அடிமாலி அருகே அம்பலபடியில் பெட்டிக் கடையில் வைத்து விற்கின்றனர்.வனவிலங்கு நடமாட்டம், வயது முதிர்வு உள்பட பல்வேறு காரணங்களால் வனங்களில் வன பொருட்களை சேகரிக்க முடியவில்லை. இருவருக்கும் முதியோர் பென்ஷன் ஐந்து மாதங்களாக முடங்கியது. மருத்துவம் உள்பட அத்தியாவசிய செலவை சமாளிக்க இயலாததால் 'கருணை கொலைக்கு தயார்' என பெட்டி கடையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். எதிர்க்கட்சிகள் இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. பென்ஷன் நிறுத்தப்பட்ட பிரச்னை பினராயி அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

panneer selvam
பிப் 11, 2024 00:31

Kerela financial crisis remains the same for the last 15 years thanks to low tax base and high social welfare expenditure . Their survival is because of liquor business like Tamilnadu . Similar situation will appear in Tamilnadu soon . Classic example is tamilnadu Transport corporations where they do not have money to pay for final settlement for retired employees. No fuel company wants to give fuel on credit, strictly cash and carry The reason is simple revenue is much less comparing the expenses so it is running under deficit . So no money for new investment . Only junks are running on the road as devils .This cash deficit can not be maintained for a long time unless state government pumps money continuously from treasury . Very unfortunate , In Tamilnadu , lot of heroic empty dialogues and hollow promises knowing it can not be implemented .


பேசும் தமிழன்
பிப் 10, 2024 20:38

நன்றாக விசாரியுங்கள்.... மத்திய அரசு கொடுத்த காசை எல்லாம்.... கம்மிகள் ஆட்டய போட்டு இருப்பார்கள்.


நரேந்திர பாரதி
பிப் 10, 2024 16:28

திருட்டு திராவிடம் நாட்டிலும் கஜானா திவால் நிலையில்தான் உள்ளது


Barakat Ali
பிப் 10, 2024 14:08

டாஸ்மாக் மட்டும் இல்லைன்னா இதே நிலை தமிழகத்திலும் ......


S.F. Nadar
பிப் 10, 2024 13:33

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது


Balraj Alagarsamy
பிப் 10, 2024 11:47

வாழ்க்கைக்கு சிறிதும் ஒத்து வராத கம்யூனிஸ்ட் கட்சிக்கு வோட்டு போடும் முட்டாள்கள் உள்ள ஒரே மாநிலம் கேரளா மட்டுமே.,, இந்த லட்சணத்தில் அந்த மாநிலம்தான் அறிவாளிகள் அதிகம் உள்ள மாநிலம் என்று பொய் பீத்தல்.,,,


NicoleThomson
பிப் 10, 2024 11:41

முதல்வரின் செலவுகளை குறைக்க வழியை காணோம் ஆனால் முதியவர்களின் வயிற்றில் அடிப்பார்கள் கம்னுஸ்டுகள் , என்ன சரிதானே வெங்கடேசா


lana
பிப் 10, 2024 10:29

எங்கே மதுரை tourist guide .... மக்கள் ஐ காக்க ஒரு குரல் கொடுத்தால் என்ன


vbs manian
பிப் 10, 2024 09:29

சொர்க்கத்தை கனவு உலகத்தில் காண்பிப்பார்கள்.இந்த நவீன யுகத்துக்கு சிறுதும் அருகதை இல்லா கட்சி. ஏழைகள் இன்னும் ஏழைகளாக கடுமையாக உழைப்பார்கள். உலகில் கம்யூனிசம் எங்கும் ஜெயித்ததாக வரலாறு இல்லை.


VENKATASUBRAMANIAN
பிப் 10, 2024 08:46

இதுதான் கம்யூனிஸ்டுகள் லட்சணம். எங்க போனார்கள் அருணன் பாலகிருஷ்ணன் கனகராஜ். வாய் கிழியும் வரை பேசுவார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை