உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் குற்றங்களுக்கு இனி தூக்கு தான்: மேற்கு வங்கத்தில் மசோதா தாக்கல்

பாலியல் குற்றங்களுக்கு இனி தூக்கு தான்: மேற்கு வங்கத்தில் மசோதா தாக்கல்

கோல்கட்டா: பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம் என மம்தா பானர்ஜி சட்டசபையில் பேசினார்.மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 21 நாட்களாக டாக்டர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மம்தா பேச்சு

மேற்குவங்க சிறப்பு சட்டசபை கூட்டத்தில் இன்று (செப்.,03) பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா மேற்குவங்க சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா குறித்து சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசியதாவது: புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். மேற்குவங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றங்கள் மூலம் நீதியை பெறுகின்றனர்.புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை மனித குலத்திற்கு எதிரானவை. சமூக சீர்திருத்தங்கள் தேவை. இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

rama adhavan
செப் 04, 2024 07:02

இது போன்ற சட்டம் செல்லாது.


Barakat Ali
செப் 03, 2024 23:13

There are alot of reason where higher officials are involed like this Sandeep Ghosh for example. Mamta is simply trying to evade the public and diverting the case so her TMC goons will be saved from this case.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2024 23:03

பாஜாக்கா கடும் எதிர்ப்பு.


xyzabc
செப் 03, 2024 21:31

தடயங்கள் ஆழித்தவர்களுக்கு தண்டனை உண்டா ?


Anonymous
செப் 03, 2024 20:48

தண்டனை அறிவிக்கிறது இருக்கட்டும்க, முதல்ல இந்த மாதிரி ஒரு மருத்துவ கல்லூரிக்கு உள்ளே, அங்கே படிக்கும் மாணவியருக்கு எந்த பாதுகாப்பும் அற்ற நிலையை மாற்றுங்கள், இந்த மாதிரி ஒரு கொடுமை மருத்துவ கல்லூரி செமினார் ஹாலில் நடக்க முடியுதுன்னா, அது எதை காட்டுது? உங்க ஆட்சியின் அவலட்சனத்தை காட்டுது, இந்த மாதிரி கொடுமைகள் நடக்காத வகையில் , முதல்ல மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பு கொடுங்க, அப்புறம் தண்டனை, அது இதுன்னு டிராமா செய்யர வேலைய செய்யுங்க, உங்க நடிப்புக்கு முன்னாடி எங்க நடிகர் திலகம் ஒன்னும் இல்லையேன்னு எங்களை நினைக்க வச்சிடீங்க தாயே.


God yes Godyes
செப் 03, 2024 19:48

யோகி குடிக்கறவன்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்த மாதிரி இந்த அம்மா பாலியல் குற்றங்களுக்காக தூக்கு தண்டனை கொடுப்பது வரவேற்க தக்கது.


Indhuindian
செப் 03, 2024 19:05

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. இதுவும் நீட் எதிர்ப்பு மசோதா மாதிரிதான். மதிய அரசு சட்டம் இருக்கும்போது அதற்காக மாநில அரசு சட்டம் இயற்றினால் மதிய அரசு சட்டத்தின் ஷரத்துகளே செல்லும். இது அந்த அம்மாவுக்கு தெரியாதா. தூங்கறவனை ஏஷுப்பலாம் ஆனா தூங்கறவன் மாதிரி பாசாங்கு பன்றவன எஸுப்ப முடியுமா? நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் கேசு


பேசும் தமிழன்
செப் 03, 2024 19:03

இப்போ தான் சட்டமே கொண்டு வருகிறீர்கள்.... அப்போ இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ???


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 03, 2024 19:00

அப்படியே திராவிட மாடலின் ஸ்டைல் ..... நீட் ஐ எதிர்த்து சட்டசபையில் மசோதா தாக்கல் .... ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க சட்டசபையில் மசோதா தாக்கல் .....


M.S.Jayagopal
செப் 03, 2024 18:55

பெரும்பாலான சட்டங்கள் ஏட்டு சுரைக்காயாகவே உள்ளன. அதிலும் தூக்கு தண்டனை என்பது போன்ற சட்டங்கள் வெத்து வேட்டுகளே.இது மக்களை ஏமாற்றும் வேலையே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை