உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 பெட்டிகள்...! அதிகாலை பயங்கரம்...! தடம்புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்

20 பெட்டிகள்...! அதிகாலை பயங்கரம்...! தடம்புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்

லக்னோ; உ.பி.யில் அதிகாலையில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல், குஜராத் மாநிலம் அகமாதாபாத் ரயில் நிலையத்துக்கு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.கான்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்த போது, எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் ரயிலின் 20 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. என்ன நடக்கிறது என்பதை உணர முடியாமல் பயணிகள் அலறினர்.சில நிமிடங்கள் கடந்தே ரயில் தடம்புரண்டு இருப்பது தெரிய வர, பெட்டிகளில் இருந்த பயணிகள் அவசர, அவசரமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.விபத்து குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தீயணைப்புத்துறையினர், ரயில்வே அதிகாரிகள் சம்பவ பகுதிக்குச் சென்றனர்.எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள் பயணிகள் அனைவரும் வேறு ஒரு ரயில் நிலையம் சென்று அங்கிருந்து அவரவர் ஊர் செல்ல ஏதுவாக பஸ் ஒன்றை ஏற்பாடு செய்து அனைவரையும் அனுப்பி வைத்தனர்.பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்ததும், அதன் காரணமாக ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது. இதில் ஏதேனும் சதிவேலை இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து மற்றும் பயணிகள் நிலை அறிய உதவி எண்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வைகுண்டேஸ்வரன்
ஆக 17, 2024 16:46

சற்றும் பொறுப்பற்ற, அறிவற்ற ரயில்வே அமைச்சகம், அதிகாரிகள். இந்த அரசு பதவி ஏற்று 4 மாதங்களில் 34 ஆவது ரயில் விபத்து.


Ramesh Sargam
ஆக 17, 2024 11:19

கடந்த சில மாதங்களாகவே ரயில் விபத்துக்கள் அதிகம் ஏட்படுகிறது. விபத்தா, அல்லது சதியா? விபத்தாக இருந்தால் ரயில்வேதுறையினர், ரயில்வே அமைச்சர் உடனடியாக காரணத்தை கண்டறிந்து இனி விபத்து ஏட்படாமல் தடுக்கவேண்டும். சதியாக இருந்தால், சதிகாரர்களை கண்டறிந்து அவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும். வெளி நாட்டின் சதி என்றால், ஒரு surgical strike அந்த நாட்டின் மீது.


நிக்கோல்தாம்சன்
ஆக 17, 2024 10:14

நாட்டை துண்டாக்கும் மர்ம நபர்கள் அவர்கள் வழித்தோன்றல்களும் சீன வைரசுக்கு பலியாகும் நாள் எப்போது ?


N Sasikumar Yadhav
ஆக 17, 2024 08:26

மர்மநபர்கள் அதிகமாக இருக்கும் பகுதி அது என்னதான் மோடிஜி அவன்களுக்கு நன்மைகள் பல செய்தாலும் அந்த மர்மநபர்களுக்கு விசுவாசமெல்லாம் கோதுமைக்கு பிச்சையெடுக்கும் நாட்டின் மீதுதான்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி