உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு

ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினும், தே.ஜ., கூட்டணியில் பங்கேற்க சந்திரபாபு நாயுடுவும் டில்லி சென்றுள்ளனர்..இந்நிலையில் டில்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது லோக்சபா , சட்டசபை தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிப் பெற்றதற்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் , தமிழகம், ஆந்திரா இடையே தென்மாநிலங்களுக்கான உரிமைகளை பாதுகாப்பார் என நம்புகிறேன்” என ‛‛ எக்ஸ்'' தளத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

theruvasagan
ஜூன் 06, 2024 15:48

நீங்க எப்படி ஜெயிக்கிற குதிரை மேல பெட் கட்டி கெலிக்கறீங்க.


Ganesan
ஜூன் 06, 2024 14:10

கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்.... இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது... இவர்கள் இருவரும் இணைந்து யாரைக் கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்.. என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது... சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது என சொல்லி அவமானப்படுத்தி மரியாதை கொடுக்காததன் விளைவாக இதே சந்திரபாபு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும் கனத்த இதயத்தோடும் திரும்பி வந்தார் எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ .... அதே சந்திரபாபுக்காக..... அவரின் ஆதரவு வேண்டும்... அவரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும்.... எனவே அவரை சந்திக்க நாள் தேதி இடம் கேட்டு ஆதரவுக் கடிதத்திற்காக பிரதமர் காத்திருக்கிற வேண்டிய நிலை... காலம்தான் எத்தனை விசித்திரமானது...???


Vijayanand
ஜூன் 06, 2024 14:10

கழகத்தை எப்படி 5 வருடம் காப்பாற்றுவது என்று கலந்துரையாட போயிருக்கார் போல


karupanasamy
ஜூன் 06, 2024 13:21

எள்ளு என்னைக்கு காயுது இந்த எலிப்புழுக்கை என்னத்துக்கு ...


venugopal s
ஜூன் 06, 2024 13:10

அடுத்த ஐந்து வருடங்களுக்கு இனி "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்" !


kannan
ஜூன் 06, 2024 11:52

What language you speak ?


Charles Binny
ஜூன் 06, 2024 11:14

முற்றத்து முல்லைக்கு மனமில்லை


venugopal s
ஜூன் 06, 2024 10:58

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு அவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்திக்க நேரம் கேட்டபோது பலமுறை அலைக்கழிக்கப் பட்டார், பாஜகவினரால் அவமானப் படுத்தப்பட்டார். இன்று அவர் பின்னால் இவர்கள் கைகட்டிய படி செல்ல வேண்டிய கட்டாயம். யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்!


Baranitharan
ஜூன் 06, 2024 13:42

அடைமொழியை எடுத்ததிற்கு நன்றி, நல்ல சந்தோசபட்டுக்கோங்க, வேற வழி இல்லை அய்யா.


Ganesan
ஜூன் 06, 2024 14:11

கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்.... இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது... இவர்கள் இருவரும் இணைந்து யாரைக் கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்.. என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது... சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது என சொல்லி அவமானப்படுத்தி மரியாதை கொடுக்காததன் விளைவாக இதே சந்திரபாபு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும் கனத்த இதயத்தோடும் திரும்பி வந்தார் எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ .. காலம்தான் எத்தனை விசித்திரமானது...??? ஆதலால் நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது என்று எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் யாருமே நம்பிக்கை இழக்கத் தேவையில்லை...


theruvasagan
ஜூன் 06, 2024 15:52

ஒரு.சமயம் அறிவாலயத்தில் மேல் தளத்தி்ல் சோதனை நடத்திக் கொண்டே கீழ் தளத்தில் கையை முறுக்கி தொகுதி பங்கீடு முடிவு பண்ணதை விட இது மோசம் இல்லை.


JEEVAKUMAR RADHAKRISHNAN
ஜூன் 06, 2024 08:55

நாட்டு நலனை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை


SELVAKUMAR
ஜூன் 06, 2024 08:36

Nice


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை