உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சொந்த தொகுதியில் ராகுல் "விசிட்"

சொந்த தொகுதியில் ராகுல் "விசிட்"

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் இரு வாரங்களில் யானை தாக்கி மூவர் பலியானதால், தனது தொகுதிக்கு காங்., எம்.பி ராகுல் சென்றார். உயிரிழந்த, 3 பேரின் குடும்பத்தினரை ராகுல் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், பந்தலுாரை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த மாதம், 31ம் தேதி லட்சுமணன்; கடந்த, 10ம் தேதி அஜீஸ்; யானை தாக்கி உயிரிழந்த நிலையில், 16- ம் தேதி, பால்,42, என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இரு வாரங்களில் யானை தாக்கி மூவர் பலியானதால், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, கடையடைப்பு போராட்டம் நடந்தது.இதனால் தனது பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, ராகுல், வயநாட்டிற்கு விரைந்தார். பின்னர் அவர் வயநாட்டில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சில இடங்களில் ராகுலின் வாகனத்தை மறித்த பொதுமக்கள் தங்களது புகார்களை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இளைஞர்களுக்கு 'இரட்டை அடி'

இது குறித்து ராகுல் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டபுள் இன்ஜின் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பா.ஜ., ஆட்சியில் இளைஞர்களுக்கு இரட்டை அடி விழுகிறது. உ.பி.யில் மூன்றில் ஒரு இளைஞர் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக் கூட வரிசையில் நிற்கின்றனர். ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் போலீசார் வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இதையெல்லாம் கண்டு வேதனையடைந்த அவர்கள், தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கியபோது, ​​போலீசாரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது. இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Visu
பிப் 18, 2024 20:59

நிதி உதவி பண்ணவில்லையா


Ramesh Sargam
பிப் 19, 2024 00:22

காங்கிரஸ் கட்சில பணம் தீர்ந்து போச்சாம்...


ManiK
பிப் 18, 2024 20:48

Photo reminds this - கைய புடிக்க இழுத்தியா..?! என்ன கையபுடிச்சு இழுத்தியா..??!!!


Kannan
பிப் 18, 2024 14:12

உத்தரப்பிரதேசத்தில் தோல்வி பயத்தால் வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் 5 வருடம் தொகுதிக்கு வராமலே இருந்து விட்டார் .எலேச்டின் நேரத்தில் இதை ஒரு காரணமாக கொண்டு இப்போது வந்துள்ளார் .


sridhar
பிப் 18, 2024 13:35

தேர்தல் நேர கரிசனம். இது கூட புரியாத அளவுக்கு மத பாசம் , பிஜேபி மேல் உள்ள வெறுப்பு தடுக்குது.


பேசும் தமிழன்
பிப் 18, 2024 12:54

பப்பு எப்போதும்... பாய் வீட்டுக்கு தானே போவார்.... இப்போது என்ன புதிதாக மாற்று மத ஆள் வீட்டிற்கு போய் போட்டோ க்கு போஸ் கொடுக்கிறார் ??? சரி சரி.... தேர்தல் வருது அல்லவா !!!


sankar
பிப் 18, 2024 12:07

தேர்தல் வரும்போது தேடி வருவாங்க, ஓடிவருவங்க தெரிந்துகொள்ளு நீ தோழா - ஓடிப்போ என்று சாட்டை சுழற்றிவிடு- விரட்டி ஒட்டிவிட்டு தோழா


duruvasar
பிப் 18, 2024 11:57

சொந்த தொகுதியில் ராகுல். இந்த தொகுதி மக்கள் அதிஷ்டசாலிகள். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்காத நிலையிலும் சொந்த தொகுதிக்கு வந்திருக்கிறார். போற்றி பாராட்டப்பட வேண்டிய தருணம்.


Svs Yaadum oore
பிப் 18, 2024 11:14

குண்டர் சட்டத்தில் கைது , இலங்கை புலிகளுடன் உறவு , ஐந்து கட்சி அமாவாசை , ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்றவருக்கு ஆதரவு .....தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர் ....


Svs Yaadum oore
பிப் 18, 2024 11:12

யானை தாக்கி மூவர் பலியானதால், பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வயநாட்டில் கடையடைப்பு போராட்டம் நடந்தததாம் .....கேரளாவில் ஆட்சி செய்வது தமிழ் நாட்டில் இவனுங்க கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் ....மேலும் கம்யூனிஸ்ட் கட்சி விடியலுக்கு ரொம்ப நெருங்கிய தொப்புள் கொடி உறவுகள் ....இதில் கடையடைப்பு போராட்டம் , ஒற்றுமை நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி விட்டு வய நாடு வருகை என்று நாடகம் நடக்குது ....


ஆரூர் ரங்
பிப் 18, 2024 11:01

மலையாளத்தில் பேசி ஆறுதல் கூறவும்????‍????. ஐந்தாண்டு எம்பியாக இருந்து கூட கத்துக்கலை ன்னு பேசக்கூடாது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை