அரசு பொறியியல் கல்லுாரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு
ஓமலுார்: சேலம், கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரியில், மின்னியல் துறை சார்பில், 'சினர்ஜி-26' தலைப்பில், தேசிய அளவில், புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று நடந்தது. முதல்வர் கீதா (பொ) தலைமை வகித்து, தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டார்.கோவை போஷ் குளோபல் மென்பொருள் நிறுவன திட்ட மேலாளர் வெங்கடேஷ்குமார், சூரிய ஆற்றல், காற்று, மின்சாரம், ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல ஆற்றல் பயன்பாடு, மின்சார வாகன பயன்பாடு, உற்பத்தி அதிகரிப்பு குறித்து பேசினார்.மேலும் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.