சேப்பாக்கத்தில் கிரிக்கெட் பார்க்க சென்ற மாணவர்கள்
ஊத்துக்கோட்டை: சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண ஊத்துக்கோட்டை விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோதண்டராமன் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 500 மாணவர்கள் சென்றனர். மாணவர்களுடன், ஆசிரியர்களும் சென்றனர். எல்லாபுரம் ஒன்றிய தி.மு.க., செயலர் மூர்த்தி, மாணவர்கள் சென்ற வாகனங்களை வழியனுப்பி வைத்தார்.