உள்ளூர் செய்திகள்

பள்ளி கோடை விடுமுறை மாணவர்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நேற்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டதால், மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.இந்த ஆண்டு கோடை வெயில் நாளுக்கு நாள் அதிமாக இருப்பதால், முன்கூட்டியே மாகியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று முன்தினம் 23ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.அதே போல, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கு நேற்று முதல் கோடை விடுமுறை துவங்கியது. கோடை விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு மற்றும் எந்த ஒரு வகுப்புகளும் நடத்த கூடாது, என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறை அடுத்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவர்கள், மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தபடி வீட்டுக்கு சென்றனர். இதனிடையே ஓரிரு தனியார் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், அவைகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்