உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - பா.ம.க.,?

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., - பா.ம.க.,?

பா.ம.க.,வும் தே.மு.தி.மு.க.,வும், அ.தி.மு.க., கூட்டணியில் சேருவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது. பா.ம.க.,வுக்கு ஆறு, தே.மு.தி.க.,வுக்கு மூன்று தொகுதிகளும், தலா ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் தருவதாக, அ.தி.மு.க., தரப்பில் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.இது குறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:தி.மு.க., - பா.ஜ., அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும், அதற்கான பேச்சு நடத்தவும், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

நன்றிக்கடன்

பா.ம.க., தரப்புடன் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்தே, சமீபத்தில், திண்டிவனம் தைலாபுரத்தில் ராமதாஸ் - சி.வி.சண்முகம் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர்.கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், ஏழு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும், பா.ம.க.,வுக்கு வழங்கப்பட்டன. தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும், கூட்டணி ஒப்பந்தப்படி, அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை, அ.தி.மு.க., வழங்கியது.இந்த தேர்தலில், ஆறு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா பதவியும் பா.ம.க.,வுக்கு வழங்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார்.இதர சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை, முதல்வராக இருந்த பழனிசாமி வெளியிட்டார்.அந்த நன்றி கடனுக்காக, அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற, ராமதாசும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஆதங்கம்

கடந்த 10 ஆண்டுகள் பா.ஜ., ஆட்சியில், அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தராமல் இருந்த அதிருப்தியை விட, அண்ணாமலையின் அபார வளர்ச்சி பா.ம.க.,வை பாதிக்கும் என்பதால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, ராமதாஸ் விரும்பவில்லை.அதேபோல், கடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது.தோற்றதும், அக்கட்சி துணை பொதுச்செயலர் சுதீஷுக்கு, பா.ஜ.,விடம் ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்கப்பட்டது; ஆனால், தரப்படவில்லை.அ.தி.மு.க., தரப்பில் அன்புமணிக்கும், வாசனுக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவிகள் வழங்கினோம்; அப்போதும் கூட, சுதீஷுக்கு பதவி தர, பா.ஜ., தரப்பு முன்வரவில்லை. அந்த ஆதங்கம், தே.மு.தி.க.,வுக்கு இன்னமும் உள்ளது.அதோடு, அக்கட்சியின் மாவட்ட செயலர்கள் பலரும், அ.தி.மு.க., கூட்டணியில் சேர வேண்டும் என்றே, பிரேமலதாவிடம் வலியுறுத்தி உள்ளனர். அதைத் தொடர்ந்து, அக்கட்சிக்கு மூன்று லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும் தருவதாக, பழனிசாமி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. அதை ஏற்கும் முடிவில் பிரேமலதா இருப்பதாக தெரிகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

anbu
பிப் 10, 2024 18:12

எடப்பாடி...அவர்களே இவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும். பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளும் வேஸ்ட் அன்பு, நியூ ஸிலண்ட்


anbu
பிப் 10, 2024 18:09

தே.மு.தி.க...விற்கு ஒரு சீட்டு அதிகமா கொடுங்க ராஜ்யசபா எம்.பி., பதவி மட்டும் கொடுக்காதீங்க ஜெயலலிதா கூறியது போல திராணி இருந்தால் தேர்தலில் வெற்றி பெற்று காட்டட்டும் சுதீஷ் நாயுடு காருக்கு ஓசி பதவி கொடுக்க வேண்டாம். விஜயகாந்த் வேறு, பிரேமலதா வேறு.உங்கள் செல்வாக்கில் அவங்களுக்கு விழுக்காடு அதிகரித்த போல நாடகம் செய்வார்கள். முடிந்தால் ஜீ போன தேர்தலில் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் ஒன்றோ அல்லது இரண்டு சீட்டுக்கள் அதிகமா கொடுங்க தேமுதிகவிற்கு மற்றும் பா மா கா...செல்வாக்கு இல்லை இதுதான் உண்மை அன்பு, நியூ ஸிலண்ட்


kulandai kannan
பிப் 10, 2024 16:59

தேமுதிக, பாமக, போன்ற waste baggage வராமலிருப்பதே பாஜகவிற்கு நல்லது.


Anantharaman Srinivasan
பிப் 10, 2024 16:31

அதிமுகவே பத்து MP சீட் கூட ஜெயிக்க. மாட்டாங்க. இவங்க. எப்படி ராஜ்யசபா சீட் கொடுப்பாங்க


venugopal s
பிப் 10, 2024 15:17

கடைசியில் வாசன் மட்டுமாவது பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா அல்லது அவரும் அல்வா கொடுத்து விடுவாரா? பாவம்!


sureshpramanathan
பிப் 10, 2024 14:52

All these stupid parties will fail Even if Anbumani win any seat he will be useless MP along with AIADMK But with BJP he can become a Central Minister Anyway he is one of the corrupt minister of the past Better go with stupid AIADMK goons who all will also see jail soon


வீரா
பிப் 10, 2024 13:38

, அதிமுக தேமுதிகவிற்கு சட்டசபை தேர்தலில் 4/6 இடங்களை கொடுத்து இருந்தால் கூட்டணி மேலும் 10 இடங்களில் ஜெயித்து இருக்கும். பாஜகவிற்கு திருக்கோவிலூர் திருவண்ணாமலை போன்ற இடங்களை தேவையின்றி கொடுத்து தானும் கேட்டு பிஜேபியையும் கெடுத்தது. இந்த இடங்களில் அதிமுக அல்லது பாமக நின்று மேற்கு மாவட்டங்களில் பிஜேபிக்கு அதிக இடங்களை ஒதுக்கிஇருக்க வேண்டும். திமுக வந்தால் பரவாயில்லை ஆனால் மற்ற அதிமுகவினர் அல்லது கூட்டணி கட்சியினர் மேலுக்கு வருவதை எடப்பாடிக்கு பிடிக்காது


Svs Yaadum oore
பிப் 10, 2024 14:24

திமுக வந்தால் பரவாயில்லை ஆனால் மற்ற அதிமுகவினர் அல்லது கூட்டணி கட்சியினர் மேலுக்கு வருவது பிடிக்காது .....உண்மை ..ஆனால் எடப்பாடி நிச்சயம் மேலுக்கு வரமுடியாது ....


திகழ்ஓவியன்
பிப் 10, 2024 13:14

அருமை அருமை விஷயம் இப்ப தெரியம் எவ்வளவு % என்று


A1Suresh
பிப் 10, 2024 12:37

ஓட்டிற்கு ஐந்தாயிரம் -ஆறாயிரம் றுப்பாய் என்று பணம் கொடுக்கும் கட்சிகள் திமுக அதிமுக . மாறாக கூட்டணியில் சேர பல நூறு கோடிகள் கேட்பவை தான் பாமக மற்றும் தேமுதிக . இவைகளால் பாஜகவிற்கு கேட்ட பெயர் தான் . குறிப்பாக பாமகவை சேர்க்கவே கூடாது


Rathinakumar KN
பிப் 10, 2024 12:32

இந்த பாமக தேமுதிக இரண்டு கட்சிகளும் திமுகவை போன்று ஒரு குடும்ப கட்சியே. இந்த இரண்டு கட்சிகளுக்கும் சீட்டும் கொடுத்து தேர்தல் செலவுக்கும் பணமும் கொடுக்க வேண்டும் . இவர்களுக்கு கிடைக்கும் ராஜ்ய சபா சீட் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே . எலியும் பூனையும் போல இந்த இரண்டு கட்சிகளும் வட மாவட்டத்தில் . இந்த இருவர்களையும் வைத்து அதிமுக தேர்தலில் கரை ஏறுவது மிகவும் சிரமமே . எனவே இந்த இரு காட்சிகளையும் பாஜக தவிர்ப்பது ஒரு வகையில் நல்லது தான் .


மேலும் செய்திகள்









புதிய வீடியோ