உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஆமதாபாத்தில் பிடிபட்டோர் பயங்கரவாதிகள் அல்ல! இலங்கை அறிவிப்பால் என்.ஐ.ஏ., குழப்பம்

ஆமதாபாத்தில் பிடிபட்டோர் பயங்கரவாதிகள் அல்ல! இலங்கை அறிவிப்பால் என்.ஐ.ஏ., குழப்பம்

'குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சிக்கிய பயங்கரவாதிகள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்; மத தீவிரவாதிகள் அல்ல' என, இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது. அதனால், இந்த வழக்கு விசாரணையை எப்படி எடுத்துச் செல்வது என்ற குழப்பம், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் சென்று, ஆமதாபாத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இலங்கையைச் சேர்ந்த முகமது நுஸ்ரத், 46, முகமது நுப்ரான், 27, முகமது பரிஸ், 35, முகமது ரஸ்தீன், 43 என தெரியவந்தது.ஆமதாபாதில் சிக்கிய நால்வரும், ஐ.எஸ்.கே.பி., என்ற, 'இஸ்லாமிக் ஸ்டேட் கோராஸான் புராவின்ஸ்' என்ற பயங்கவராத அமைப்பில், தீவிரமாக செயல்பட்டு உள்ளனர். அந்த அமைப்பை வலுப்படுத்த, போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல்களை திரட்டிய குஜராத் தீவிரவாத தடுப்பு போலீசார், அதன் அடிப்படையிலேயே தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில், பிடிபட்ட நால்வரின் பின்புலம் குறித்து நன்கு அறிந்த இலங்கை அரசு, பயங்கரவாத தடுப்பு போலீஸ் அதிகாரிகள் நால்வர் இடம் பெற்ற குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. இலங்கையிலும், இந்தியாவிலும் விசாரணை மேற்கொண்ட குழுவினர், ஆமதாபாத்தில் பிடிபட்டவர்களோடு தொடர்புடையவர்கள் என, இலங்கையில் இருப்போர் சிலரையும் கைது செய்தனர். இந்நிலையில், ஆமதாபாத் போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கை, என்.ஐ.ஏ., அதிகாரிகளும் விசாரிக்க துவங்கினர். அவர்கள், ஆமதாபாதில் பிடிபட்ட நால்வரும், பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, இலங்கையில் இருந்து அடிக்கடி தமிழகம் வந்து சென்றது குறித்த தகவல்களை சேகரித்தனர். இது தொடர்பாக, தமிழக போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரித்தனர். இந்நிலையில், 'ஆமதாபாத் விமான நிலையத்தில் பிடிபட்ட இலங்கையைச் சேர்ந்த நால்வரும், மத பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் அல்ல' என, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செயலர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

இலங்கையில் இருந்து குஜராத் மாநிலம் ஆமதாபாதுக்கு சென்று பிடிபட்ட நால்வர் குறித்து, இந்திய அரசு தரப்பில் தரப்பட்ட தகவல்கள் அடிப்படையில், நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள் அனைத்தையும், வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால், ஆமதாபாதில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் மத பயங்கரவாதிகள் அல்ல; அவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். தற்போதைக்கு இதைத்தான் சொல்ல முடியும். ஏற்கனவே இலங்கையில், ஈஸ்டர் நாளில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் போல, வேறு பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் மீண்டும் நடக்காது. அந்த அளவுக்கு, பயங்கரவாத நடவடிக்கைகளை கண்காணித்து எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். பாதுகாப்பு விஷயத்தில் அரசு எச்சரிக்கையுடன் இருப்பதால், மக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலரின் இந்த பேட்டி, கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 'வழக்கு விசாரணையை அடுத்த கட்டமாக எப்படி எடுத்துச் செல்வது' என்ற தவிப்பில், ஆமதாபாத் போலீசாரும், என்.ஐ.ஏ., அதிகாரிகளும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

subramanian
ஜூன் 03, 2024 23:14

இலங்கை சொல்வதை என் ஐ ஏ நம்பாது. நம்முடைய விசாரணை நாம் செய்வோம். குழம்ப வேண்டாம்.


சிந்தனை
ஜூன் 03, 2024 22:17

முஸ்லிம் குற்றவாளிகளுக்கு தான் மிக நன்றாகவே கரெக்ட் பண்ண தெரியும்


Radhakrishnan Seetharaman
ஜூன் 03, 2024 21:07

இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு போன்ற நாடுகள் சிறிதும் நன்றி இல்லாதவை. நாம் அவர்களுக்கு எவ்வளவு தான் நன்மை செய்தாலும், அவர்கள் நமக்கு தீமை மட்டும் தான் செய்வார்கள்.


Aroul
ஜூன் 03, 2024 17:06

இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறிவிட்டது இந்திய அதிகாரிகளை குழப்பி விட்டனர்.


Shekar
ஜூன் 03, 2024 10:05

பாகிஸ்தான் துப்பாக்கி வச்சிருக்கான், போட்டு தள்ளுங்கய்யா அவனுகளை


venugopal s
ஜூன் 03, 2024 07:12

தமிழர்களையும், தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும், தமிழ்நாட்டையும் கேவலமாகப் பேசி ஊளையிட்ட நரிகள் இப்போது என்ன சொல்லப் போகின்றன?


N Sasikumar Yadhav
ஜூன் 03, 2024 08:34

பொறுமை வேநு பயங்கரவாத தடுப்பு காவல்துறை ஆவணம் எதுவுமில்லாமல் கைது செய்திருக்காது. தமிழக மொதல்வர் சிலிண்டர் வெடிப்பு என இப்போதுவரை கூறுகிறார் ஓட்டுப்பிச்சைக்காக சிறுபான்மை மனம் நோகாதபடி நடந்து கொள்கிறார்


subramanian
ஜூன் 03, 2024 23:10

முகமூடி வேணு, உன் தமிழக அரசு செயல்படுகிறதா?.. கொள்ளை அடிப்பது மட்டுமே உங்களுக்கு வழக்கம், நோக்கம். ஊழல் பெருச்சாளி கம்முனு கிட.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை