உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தமிழகத்தில் என்னாச்சு விஸ்வகர்மா திட்டம்?

தமிழகத்தில் என்னாச்சு விஸ்வகர்மா திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு கடன் உதவி வழங்கும் மத்திய அரசின், 'விஸ்வகர்மா' திட்டம் துவங்கி, மூன்று மாதங்களாகியும், தமிழகத்தின் செயல்படுத்தப்படும் சுவடு தெரியவில்லை.பொற்கொல்லர், குயவர், சிற்பி, தச்சர், தையல்காரர் உட்பட, 18 பாரம்பரிய கைவினை கலைஞர்கள் பயன் பெற, பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், 2023 செப்., 17ல் துவக்கப்பட்டது. திட்டத்தின் கீழ், கை வினை கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறும் ஒவ்வொரு நாளும், 500 ரூபாய் உதவித்தொகை உண்டு. 5 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை பிணையில்லாமல் கடனும் உண்டு. திரும்ப செலுத்த, 30 மாதம் வரை அவகாசம் அளிப்பதுடன், மானியமும் வழங்கப்படுகிறது.இதற்காக மத்திய அரசு, 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், திட்டத்தைச் செயல்படுத்துகிறது. விஸ்வகர்மா திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே, குலக்கல்வியை ஊக்குவிப்பது போல் இருப்பதாக, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. திட்டத்தின் நோக்கம், வழிகாட்டுதல் தொடர்பாக ஆய்வு செய்ய, மாநில திட்டக் குழு துணை தலைவர் தலைமையில் குழுவும் அமைத்தது.அக்குழுவில், நகராட்சி நிர்வாக துறை செயலர், குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் உட்பட, நான்கு பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த செப்டம்பர் முதல் செயல்படும் குழு, இதுவரை அறிக்கை சமர்ப்பித்ததா எனத் தெரியவில்லை. இதுகுறித்து, பொற்கொல்லர்கள் கூறுகையில், 'ஆபரணங்கள் வடிவமைப்பிற்கு, நவீன கருவிகள் வந்துள்ளன; இருப்பினும், கையால் செய்யப்பட்ட ஆபரணத்தை வாங்க, பலர் ஆர்வம் காட்டுகின்றனர். 'புதிதாக பொற்கொல்லர் தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு பயிற்சியும், நிதி உதவியும் கிடைக்க, விஸ்வகர்மா திட்டம் உதவியாக இருக்கும். எனவே, அத்திட்டத்தை தமிழகத்தில் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Sivagiri
ஜன 04, 2024 20:22

கருணாநிதி-ன்னு பெயர் இல்லாத எந்த திட்டமும் இப்போதைக்கு கிடையாது - - -


r.sundaram
ஜன 04, 2024 14:29

மஹ்தியா அரசு எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அதை எதிர்ப்பது தான் தமிழக அரசின் வேலை. அதுபோல் இந்த நல்ல பயனுள்ள திட்டமும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த படாது என்பது திண்ணம்.


அப்புசாமி
ஜன 04, 2024 11:23

ஏன் விஸ்வகர்மாக்களுக்கு மோடியே நேரடியா வங்கிக்.கணக்கில் கடன் குடுத்து உதவ வேண்டியதுதானே?


Suppan
ஜன 04, 2024 14:09

பயிற்சி பெற்றவுடன் வங்கிக்கணக்கில்தான் உதவித்தொகை பணம் செலுத்தப்படும். கடனும் வங்கிகள்தான் அளிக்கும். இதைப்பற்றி முழுமையாகப்புரிந்துகொண்டு கருத்து எழுதவும்.


விமல்
ஜன 04, 2024 11:06

ஆமாம் இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் நன்றி இப்படிக்கு சலூன் கடை கார்ன் விமல் சேலம் மாவட்டம் 7373272200


Kannan Chandran
ஜன 04, 2024 08:22

பின்னே எல்லோருக்கும் தொழில் செய்ய உதவி செய்தால் எங்களுக்கு 200ரூபாய் உ.பி.க்களுக்கு நாங்கள் எங்கே போவது..


VENKATASUBRAMANIAN
ஜன 04, 2024 07:50

திருட்டு திராவிடம் இதை எதிர்க்கும. காசு அடிக்க முடியாது எந்த திட்டத்தையும் வர விட மாட்டார்கள. ஓட்டு போட்டவர்கள் சிந்திக்க வேண்டும்


Ramesh Sargam
ஜன 04, 2024 07:49

டாஸ்மாக் சரக்கு உட்பத்தியை பெருக்க ஏதாவது திட்டம் கூறுங்கள். உடனே தமிழக அரசு செயல்படுத்தும்.


அப்புசாமி
ஜன 04, 2024 07:11

விஸ்வகர்மான்னு ஒரு ஜாதிக் கூட்டத்தை வளர்க்குற கூட்டம்


Gowtham
ஜன 04, 2024 13:54

ஜாதி கூட்டம் இல்ல சமுதாயம். 200 ரூபாய் வாங்கிட்டு இந்த கமெண்ட் பண்றதுக்கு நீ போய் பத்து பேரு கிட்ட வேலை கேட்டு உழைக்கலாம். தமிழ்நாட்டுல எல்லா சமுதாயத்திற்கும் பெருமையான வரலாறும் சிறப்பு இயல்புகளும் உண்டு அந்த வகையில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கும் பெருமையான வரலாறும் சிறப்பு இயல்புகளும் உண்டு இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கணும்னா நீங்க வசூல் பண்றதுக்கு பயன்படுத்துற மிகப்பெரிய கோபுரங்களை கொண்ட புகழ்வாய்ந்த கோயில்களின் வரலாறுகளை தெரிஞ்சுக்கணும் அதுக்கு நீ இன்னும் பல ஜென்மம் எடுக்கணும். பிரதமர் மோடி அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக இந்த திட்டத்தை கொண்டு வரவில்லை. இதெல்லாம் உனக்கு புரியாது நீ முதல்ல நல்ல சாப்பாடு சாப்பிடணும் நமது நாட்டில் உள்ள கைவினைக் கலைஞர்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் அதற்கு அரசாங்கம் சார்பில் நிதி உதவி செய்யப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இது உனக்கு தெரியனும்னா இருநூறு ரூபா வாங்கிட்டு டாஸ்மாக் போறத கொஞ்சம் ஒத்திவைச்சுட்டு விஸ்வகர்மா திட்டம் அப்படிங்கறதுக்கு என்னன்னு முதல்ல படி அதுக்கு அப்புறம் வாந்தி எடு


அப்புசாமி
ஜன 04, 2024 07:10

அடடே... பிரதமரும், நிதியமைச்சரும் சேர்ந்து அவிங்களை கோடீஸ்வரர்களாக்கியிருப்பாங்கன்னு நினைச்சேனே.


Varadarajan Nagarajan
ஜன 04, 2024 07:01

மத்திய அரசின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இதன் வழியாக பி ஜே பி தமிழகத்திற்கு வந்துவிடும். எனவே ஒரு குழு அமைத்து பரிசீலிக்கப்படுகின்றது. அதில் தனக்கு வேண்டியபடி அறிக்கை சமர்பிக்கக்கூடியவ்ர்களைத்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் ஆய்வு காலம் தேவைப்படும் அளவிற்கு நீஈஈதித்துகொண்டீ செல்லப்படும். தங்களுக்கு சாதகமான அறிக்கையாக இருந்தால் அதி கவனத்தில் கொள்வோம். இல்லையேல் வழக்கம்போல் கிடப்பில் போடப்படும். இதுதானே நடந்துகொண்டுள்ளது. மக்கள் வரிப்பணம்தானே. எங்க அப்பன் வீட்டு பணமா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை