மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2
ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி அரசு அமல்படுத்திய நில உரிமை சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பலை தான், சட்டசபை தேர்தலில், அவரது ஆட்சியை வீழ்த்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.நாடு முழுதும் நில உரிமை ஆவணங்களை, 'டிஜிட்டல்' முறைக்கு மாற்ற, மத்திய அரசின், 'நிடி ஆயோக்' அமைப்பு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது. நில உரிமையை வரையறுப்பதற்கான மாதிரி சட்டத்தை. 'நிடி ஆயோக்' அமைப்பு, 2020ல் வெளியிட்டது.இதை பின்பற்றி, அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கான சட்டங்களை நிறைவேற்ற பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, நில உரிமை சட்டத்தை, 2023 அக்டோபரில் அமல்படுத்தியது.சட்டம் சொல்வது என்ன?
இதுகுறித்து, சொத்து விவகாரங்களுக்கான சட்ட வல்லுனரும், வழக்கறிஞருமான ஜி.ஷியாம்சுந்தர் கூறியதாவது:நடந்தது என்ன?
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசு, நில உரிமை சட்டத்தை, 2023 அக்டோபரில் அமல்படுத்தியது. ஆந்திராவில், 17,000 வருவாய் கிராமங்களில், நில அளவை பணிகளை மேற்கொள்ள, 15,000 சர்வேயர்கள் தேவைப்படுகின்றனர்.இதில், இரண்டு ஆண்டுகளில், 2,000 கோடி ரூபாய் செலவு செய்ததில், 6,000 கிராமங்களில் மட்டுமே சர்வே மேற்கொள்ளப்பட்டு, நில உரிமை ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இந்த பின்னணியில், நில உரிமை சட்டம், அனைவருக்கும் நில உரிமையில் உத்தரவாதம் அளிக்கும் என, அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.நிர்வாக ரீதியாக இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், அங்கு தெலுங்கு தேசம், ஜனசேனா உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தங்களின் நில உரிமை பறிபோகும் என்ற அடிப்படையில், மக்களிடம் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலின் போது, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நில உரிமை சட்டம் திரும்ப பெறப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதன் அடிப்படையில், தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது; நில உரிமை சட்டம் திரும்ப பெறப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: ஆந்திராவில் நிறைவேற்றப்பட்டது போன்ற நில உரிமை சட்டம், தமிழகத்துக்கு அவசிய தேவையாகும். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், நில உரிமை என்பது சிக்கலாக உள்ளது. சில இடங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட பரிமாற்றங்கள் முடிந்த நிலையில், அதன் உரிமை தொடர்பான புதிய பிரச்னைகள் வருகின்றன. பல இடங்களில் வாரிசு இல்லாததால், உரிமை கோரப்படாத சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இதுபோன்ற சொத்துக்களை குறிவைத்து, சமூக விரோதிகள் போலி பத்திரங்களை தயாரித்து, நில மோசடியில் ஈடுபடுகின்றனர். நில உரிமை சட்டம் வந்தால், இதுபோன்ற மோசடிகள் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
03-Oct-2025 | 29
03-Oct-2025 | 2