மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
9 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
9 hour(s) ago
புதுச்சேரி: கவர்னர் பரிந்துரைப்படி பொதுமக்கள் குறை தீர்வு நாள் வரும் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கவர்னர் பரிந்துரையின்படி புதுச்சேரியில் ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி பொதுமக்கள் குறை தீர்வு நாளாக கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதுச்சேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் கலெக்டர் தலைமையில் மாதம் தோறும் 15ம் தேதி பொதுமக்கள் குறைதீர்வு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.வரும் 15ம் தேதி விடுமுறை நாளாக இருப்பதால், இம்மாதத்திற்கான பொதுமக்கள் குறை தீர்வு நாள் வரும் 19ம் தேதி காலை 10:00 மணி அளவில் வழுதாவூர் சாலை கலெக்டர் அலுவலக கலந்தாய்வுக் கூடத்தில் நடக்கிறது.பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago