உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது

பொது இடத்தில் மது அருந்திய 6 பேர் கைது

திருக்கனுார், :திருக்கனுார், காட்டேரிக்குப்பம் பகுதிகளில் பொது இடத்தில் மது அருந்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். பொது இடத்தில் மது அருந்தி கொண்டு, அவ்வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்ட சோரப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜசேகர், 34; சோம்பட்டு சந்தோஷ்குமார், 23; விழுப்புரம் பிரகாஷ், 28; குமார், 49, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீசார் பொது இடத்தில் மது அருந்தியதாக குமாரப்பாளையத்தை சேர்ந்த ரவி, 42; கருவடிக்குப்பம் சிலம்பரசன், 36, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ