உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உலக நீர் பரப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக நீர் பரப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி : சேலியமேடு வாணிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உலக நீர் பரப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பாகூர் ஏரிக்கரையில் நடந்தது. மய்யம் பவுண்டேஷன் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி சமுதாய நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் வரவேற்றார்.நிறுவனர் பாலகங்காதரன், புதுச்சேரி பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் அறிவியல் மாணவிகள் ஜான்சி, அபர்ணா ஆகியோர் பள்ளியில் படிக்கும் 100 மாணவர்களுக்கு நீரின் முக்கியத்துவம், சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் நீர் நிலைகளை பாதுகாப்பது, சூழலியல் பாதுகாப்பு, மாசில்லா காற்று, நெகிழி பயன்பாடு குறைப்பது குறித்து விளக்கப்பட்டது.தொடர்ந்து பாகூர் ஏரிக் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் சமுதாய நலத்திட்ட அலுவலர் வெரோனிஸ் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை