| ADDED : ஏப் 17, 2024 11:53 PM
புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து மாநில நிர்வாகிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பா.ஜ., மாநில துணைத் துணைத் தலைவர் சிவகுமார் முத்தியால்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.பா.ஜ.,விற்கு ஓட்டளித்தால் புதுச்சேரிக்கு கிடைக்கும் நன்மைகளை விளக்கி கூறிஓட்டு சேகரித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கான ஆட்சி நடத்தால் மட்டுமே மாநிலம் வளர்ச்சி பெறும். எனவே தாமரை சின்னத்திற்கு ஓட்டளித்து, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் நாமசிவாயத்தை வெற்றிபெற செய்ய வேண்டும் என, வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.பா.ஜ., நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரிவு கிருஷ்ணராஜ், சாய் ராஜகோபால், சீனிவாச பெருமாள், நக்கீரன் உள்ளிட்ட நிர்வாகிகள்உடனிருந்தனர்.