உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா

முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம்-சொக்கம்பட்டு முத்தாலம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் - சொக்கம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தலாம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி துவங்கியது.அன்று காலை 10:00 மணிக்கு பூங்கரம் வீதியுலா, 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் செடல் அணிந்து, தேர், கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு மனிதனுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி