உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

அரியாங்குப்பம், : சாலையில் இறந்த கிடந்த பேக்கரி தொழிலாளி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இடையார்பாளையம் என்.ஆர்., நகரை சேர்ந்தவர் சுப்ரமணி, 48; பேக்கரியில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நோணாங்குப்பம் பகுதிக்கு சென்றவர் சாலையில் மயங்கி கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ