உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

புதுச்சேரி: கன்னியக்கோவிலில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.பாகூர் அடுத்த கன்னியக்கோவில் பாலம் அருகில் 2 வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பாகூர் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, போலீசாரை பார்த்து தப்பியோட முயன்ற 2 வாலிபர்கள் பிடித்து விசாரித்தனர்.அவர்கள் பிள்ளையார்குப்பம் ராஜேஷ், 19, ஈச்சங்காடு சுரேந்தர், 23, என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதையடுத்து, இருவர் மீதும் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை