| ADDED : ஜூன் 26, 2024 07:28 AM
சிதம்பரம் : சிதம்பரம் அருகே புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அரசு மருத்துவமனையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது.புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டு கிரா மத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். அரசு போக்கவரத்துக் கழக கண்டக்டர். இவருக்கும், சின்னசேலம் சுப்ரமணியன் மகள் சூர்யா, 32; என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 17ம் தேதி திருமணம் நடந்தது.இருவரும் பெருமாத்துாரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் சூர்யா நேற்று காலை வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்த அவரது பெற்றோர், தங்கள் மகளுக்கு திருமணத்தின்போது 15 சவரன் நகை உள்ளிட்ட சீர்வரிசை செய்த நிலையில் மீண்டும் வரதட்சனை கேட்டு தொந்தரவு செய்ததால் சூர்யா இறந்ததாக தெரிவித்தனர்.அதன்பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்துவிசாரித்து வருகின்றனர். மேலும், வரதட்சணை கொடுமையாஎன்பது குறித்து சப் கலெக்டர்ராஷ்மிராணி, விசாரித்து வருகிறார்.இந்நிலையில் சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனை நடந்த சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கூடியிருந்த சூர்யா மற்றும் செல்வக்குமார் உறவினர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.