உள்ளூர் செய்திகள்

தொழிலாளி சாவு

புதுச்சேரி : முருங்கப்பாக்கம், சேத்திலால் நகரைச் சேர்ந்தவர் முருகன், 40; கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் முருகன் அதிகமாக குடித்துவிட்டு அதேப் பகுதியில் உள்ள பெட்டிக்கடை அருகில் மயங்கி விழுந்தார். தகவலறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.டாக்டர் பரிசோதித்து முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்