மேலும் செய்திகள்
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
06-May-2025
புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அரசு பல் மருத்துவ கல்லுாரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்து பைக்கை சோதனை செய்தனர்.அதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், பாக்கமுடையன்பேட், பக்கிரிசாமி மகன் செல்வராஜா வெங்கடஜலபதி (எ) செல்வா, 29; கோவிந்தசாலையை சேர்ந்த சார்லஸ் மகன் ஜோசப் மெச்செல்ட், 24; என்பது தெரியவந்தது. மேலும், கோரிமேடு பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2 கிலோ 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக், 2 மொபைல் போன்கள் மற்றும் ரூ. 41, 300 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
06-May-2025