உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மயான கொள்ளை உற்சவம்

மயான கொள்ளை உற்சவம்

திருக்கனுார், : கொடுக்கூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயான கொள்ளை உற்சவம் இன்று நடக்கிறது.திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான கொடுக்கூர் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மயானக்கொள்ளை உற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 8ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குடம் ஊர்வலம், அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று (9ம் தேதி) காலை 8:00 மணிக்கு கொரைக் கூடை வீதியுலா, இரவு 9:00 மணிக்கு குறத்தி வேடத்தில் அம்மன் ஊர்வலம், வல்லாளக்கண்டன் கோட்டையை அழித்தல், ரணகளிப்பு நிகழ்ச்சி நடந்தது.முக்கிய நிகழ்வாக, இன்று (10ம் தேதி) மதியம் 12:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மயானத்திற்கு சென்று, மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை