உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பகலிரவு பயிற்சியில் இந்தியா: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக

பகலிரவு பயிற்சியில் இந்தியா: ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராக

கான்பெரா: அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய லெவன் அணியுடன் விளையாடுகிறது.ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்மூலம் 1991-92 சீசனுக்கு பின், முதன் முறையாக இவ்விரு அணிகள் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன.இத்தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. இதன்படி முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22-26ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.பகலிரவு டெஸ்ட்: இதில் அடிலெய்டில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலிய 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணியுடன் இரண்டு நாள் பகலிரவு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இப்போட்டி கான்பெராவில் நவ. 30-டிச. 1ல் நடக்கவுள்ளது. இதன்மூலம் இந்திய அணி, 4வது முறையாக ஆஸ்திரேலிய 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணியுடன் விளையாடுகிறது. கடைசியாக 2004ல் ஸ்டீவ் வாக் தலைமையிலான 'பிரைம் மினிஷ்டர் லெவன்' அணி, ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை