உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பரங்கிமலை மெட்ரோவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பரங்கிமலை:பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில், வெடி குண்டு வைத்திருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு,தகவல் கிடைத்தது.போலீசார், மோப்ப நாயுடன், பரங்கிமலை ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி - சிறுசேரி தடத்தில் நடக்கும் கட்டுமான பணி இடங்களில், ஒரு மணி நேரம் தீவிர சோதனை செய்தனர். இதில், வெடிகுண்டு எதுவும் இல்லை. வெறும் புரளி என்பது தெரிந்தது. போலீசார், மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி