| ADDED : ஜூலை 28, 2024 06:58 AM
தாம்பரம் : தாம்பரம் ரயில் நிலைய பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள்,55 மின்சார ரயில்கள்ரத்து செய்யப்பட்டுஉள்ளன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் நேற்று, வழக்கத்தைவிட மக்கள் கூட்டம்அதிகரித்தது.ரயில் பயணியர் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் அதிக அளவில் பயணியர் கூடியதால் பேருந்துகளுக்குள் கடும் நெசரிலில் பயணியர் அவதிப்பட்டனர். தனிநபர் வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவை அணி வகுத்ததால், தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சென்னை கடற்கரை யில் இருந்து பல்லாவரத்திற்கும், கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டிற்கும் சிறப்பு ரயில்கள், காலை 9.30 மணி முதல் இயக்கப்பட்டன.பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு மினி பேருந்துகள் இயக்கப்பட்டன.விமான நிலையத்திலிருந்து செங்கல்பட்டுவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால், பயணி கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, தாம்பரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.