கானத்துார்:கானத்துார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரை சந்திப்பில் இருந்து முட்டுக்காடு வரை, கடற்கரை முடியும் வகையில், 25க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இதில், 15க்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள கடற்கரை பகுதியை, ஆபத்தான, ஆழமான, குளிக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக,காவல் துறை அறிவித்துள்ளது.எனினும், ஓராண்டில், நீலாங்கரை, கானத்துார் காவல் நிலைய எல்லையில், 15க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர். இதில், 10க்கும் மேற்பட்டோர் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.போலீசார், அனைத்து தெருக்களில் ரோந்து பணியில் இருந்தாலும்,அவர்கள் அங்கிருந்து சென்றதும், ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளிப்போர்அதிகரித்து வருகின்றனர்.இரவில் செல்லும் காதலர்கள், தம்பதியரிடம் வழிப்பறி, பார்ட்டி என்ற பெயரில் மது அருந்தி, பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபடும் சம்பவமும் நடக்கிறது. இதனால், இந்த பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம்.மெரினா கடற்கரைக்கு வழங்கியதுபோல், சமபரப்பு, சகதி, மணலில் செல்லக்கூடிய ரோந்து வாகனம் வழங்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்தனர்.