உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கார்கில் போர் வெற்றி தினம் மதுராந்தகத்தில் பேரணி

கார்கில் போர் வெற்றி தினம் மதுராந்தகத்தில் பேரணி

மதுராந்தகம்:மதுராந்தகம் ஹிந்து ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கார்கில் போர் வெற்றி தின பேரணி, நேற்று நடந்தது. பேரணியை, மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மருத்துவமனை சாலை, ஜி.எஸ்.டி., சாலை மற்றும் தேரடி தெரு வழியாக, முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர். பேரணி முடிந்து, பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்வில், நாட்டுப்பற்றையும், இராணுவ வீரர்களின் தியாகத்தையும், தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் எடுத்துக் கூறினர்.தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, கார்கில் போர் வெற்றி சார்ந்த கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பாபு, தேசிய மாணவர் படை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை