உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்ரீபெரும்புதுார் ஓட்டு எண்ணிக்கைக்கு ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

ஸ்ரீபெரும்புதுார் ஓட்டு எண்ணிக்கைக்கு ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் ஊழியர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., அ.தி.மு.க., த.மா.கா., உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தொகுதியில், கடந்த ஏப்., 19ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது.இம்மையத்தில், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டசபை தொதிகளுக்கு தரைதளத்திலும், மதுரவாயல், அம்பத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளத்திலும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு இரண்டாம் தளத்திலும், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைந்துள்ளன.ஆறு சட்டசபை தொகுதிக்கும், 12 ஸ்டராங்க் ரூம்களில், 4,874 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி.பேட்., இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, வரும் ஜூன் 4ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.இந்த தொகுதியில், ஓட்டு எண்ணிக்கை பணிக்காக, மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வையாளர்கள் ஆகியோர், குலுக்கல் முறையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண்ராஜ் முன்னிலையில், நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட கலெக்டரின் தேர்தலுக்கான நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன், தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை