உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இயங்காத போக்குவரத்து சிக்னல் பரனுாரில் விபத்து அபாயம்

இயங்காத போக்குவரத்து சிக்னல் பரனுாரில் விபத்து அபாயம்

மறைமலைநகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை ஓரம் பரனுார் பகுதியில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே, சாலை சந்திப்பு உள்ளது.இந்த சந்திப்பு வழியாக பரனுார், செட்டிபுண்ணியம், டாக்கா நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், தினமும் ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து சென்று வருகின்றனர்.மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள போக்குவரத்து 'சிக்னல்' செயல்படாமல், வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. இதனால், அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.அருகில் பேருந்து நிறுத்தம் உள்ளதால், பயணியர் சாலையைக் கடந்து செல்லும் போது, அச்சத்துடனேயே செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன், இந்த தானியங்கி போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டுவர, போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை