உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புறவழிச்சாலையில் ஆக்கிரமித்துள்ள டூ - வீலர்களால் கடும் அவதி

புறவழிச்சாலையில் ஆக்கிரமித்துள்ள டூ - வீலர்களால் கடும் அவதி

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் இரு மார்க்கத்திலும் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதில், எலப்பாக்கம், திம்மாபுரம் பகுதியிலிருந்து, தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் புறவழிச்சாலை பகுதியில், வணிக வளாகங்கள் மற்றும் வங்கிகள், மளிகை கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை உள்ளன.இவற்றில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என, இடவசதி இல்லை. அதனால், இருசக்கர வாகனங்களில் வருவோர், வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.அச்சிறுபாக்கம், எலப்பாக்கம் பகுதியில் இருந்து வரும் அரசு பேருந்து மற்றும் புறவழி சாலையைப் பயன்படுத்துவோர், இதனால் மிகவும் அவதி அடைகின்றனர்.எனவே, புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை